1989 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]
அரசியல் நிலவரம்
கடந்த எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் 1984 நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைத்த அதிமுக–காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதல்வர் எம். ஜி. ஆர் தனது 1984 முதல் 1987 வரை உடல் நலக்குறைவால் ஆட்சி செய்தார்.
அந்த ஆட்சி காலத்தில் தனது நல்ல திட்டங்களான சத்துணவு திட்டத்தை பெரிதாக விரிவுபடுத்தினார்.
ஈழத்தமிழ்ற்கள் மற்றும் விடுதலை புலிகள் தலைவர் வே. பிரபாகரன் ஆகியோருக்கு பல நிதி உதவி செய்தும் ஈழதமிழ் மக்கள் தமிழகத்தில் ஆதரவு அளித்தார். எம். ஜி. ஆர் அவர்கள்
கடந்த ஆட்சியில் அதிமுகவில்எம். ஜி. ஆர் வெகுநாட்களாக நடத்தாத ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்தினார்.
தமிழக சட்டமன்றத்தில் செயல்பட்டு வந்த சட்டமன்ற மேலவை (எம்எல்சி)யை எம். ஜி. ஆர் கலைத்தார். இது இன்று வரை அவர் மீது பெரும் குற்றமாக சாற்றபட்டு வருகிறது.
அதே போல் மத்திய கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியில் பிரதமர் ராஜீவ் காந்தி பல சிறப்புடைய திட்டங்களை கொண்டு வந்தபோதிலும். தமிழகத்திற்கும் பல பயனுள்ள வகையில் இருந்தது.
அதில் குறிப்பாக நவோதயா எனப்படும். இந்தி வழி கல்வியை தமிழகத்தில் தனியாக நிர்வகிக்கபட்டது.
கடந்த ஆட்சி காலத்தில் தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) டிசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார்.
ஆனால் இதை ஏற்க இயலாத கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர். எம். வீரப்பன் அவர்கள் முதல்வர் எம்ஜியாரின் மனைவி வி. என். ஜானகியை முதல்வராக்கினார்.
ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை.
பின்பு 132 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர்.
மீதமுள்ள 99 சட்டமன்ற உறுப்பினர்கள் வி. என். ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார். ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்கினார்.
இரு ஆண்டுகளுக்கு முன்னர் 1986 இல் திமுகவின் பத்து உறுப்பினர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்அரசியலமைப்பு சட்ட நகலை எரித்தற்காக இதே போன்று அவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 இல் இருந்து 191 ஆகக் குறைந்ததிருந்தது. புதிய அரசின் மீது ஜனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் எதிர்கட்சியான திமுகஅதிமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில் சச்சரவு ஏற்பட்டது.
அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். வி. என். ஜானகி இராமச்சந்திரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற போதிலும்.[3][4][5]
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் 117க்கும் குறைவான சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதை காரணம் காட்டியும், சட்டமன்ற அவையில் நடைபெற்ற குழப்பங்கள் மற்றும் அராஜக அடிதடி செயலை காரணம் காட்டி அன்றைய தமிழக ஆளுநர் சுந்தர் லால் குரோனா கொடுத்த அறிக்கையை வைத்து இந்தியப் பிரதமர், ராஜீவ் காந்தியின் மத்திய அரசு ஜானகியின் அரசைக் கலைத்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது.
பின்பு அதிமுக இரண்டாகப் பிளவு பட்டது. தேர்தல் ஆணையம் இரு கட்சிகளையும் அதிகாரப்பூர்வமான அதிமுகவாக ஏற்க மறுத்து, அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது. அதிமுக (ஜா) அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், அதிமுக (ஜே) அணிக்கு சேவல் சின்னமும் வழங்கப்பட்டன. எந்த அதிமுக அணிக்கு ஆதரவளிப்பது என்ற பிரச்சனை மற்ற கட்சி தலைவர்களுக்கும், வாக்காள மக்களுக்கும் ஏற்பட்டது.
ஜனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிர்வாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒன்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது. கீழிலுள்ள பட்டியலில் இந்த இரு தொகுதிகளின் முடிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.[14][15][16]
அதிமுகவின் ஒற்றுமையின்மையால் அக்கட்சியின் வழக்கமான ஆதரவு சிதறிவிட்டது. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட திமுக குறைவான வாக்குகளைப் பெற்றாலும், பெருவாரியான இடங்களில் வென்றது.[9]
ஆட்சி அமைப்பு
திமுக தனிப்பெரும்பான்மை பெற்று அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதி அவர்கள் சுமார் 13 வருடங்கள் கழித்து மூன்றாவது முறையாக முதல்வரானார்.