சதுரங்கம் (இந்திய பாரம்பரிய விளையாட்டு)![]() சதுரங்கம் (சமக்கிருதம்: चतुरङ्ग, caturaṅga) என்பது பண்டைய இந்தியாவில் தோன்றிய ஒரு பலகை விளையாட்டு ஆகும். இது முதன்முதலில் கிபி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் விளையாடப்பட்டதாக அறியப்படுகிறது. இந்த விளையாட்டு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்து இருந்திருக்கலாம். இதுவே தற்காலத்தில் உலகம் முழுதும் பிரபலமாக விளையாடப்பட்டுவரும் "செஸ்" விளையாட்டின் முன்னோடியாகக் கருதப்படுகின்றது. சில நிச்சயமற்ற தன்மைகள் இருந்தாலும், சதுரங்க வரலாற்றாசிரியர்களிடையே நிலவும் கருத்து என்னவென்றால், இது சியாங்கி (சீன), சாங்கி (கொரிய), சோகி (ஜப்பானிய), சிட்டுயின் (பர்மிய), மகருக் (தாய்) அவுக் சத்ராங் (கம்போடிய) மற்றும் நவீன இந்திய சதுரங்கம் ஆகிய பலகை விளையாட்டுகளின் பொதுவான மூதாதையர் என கருதப்படுகிறது. இது இந்தியாவிலிருந்து சாசானியப் பெர்சியாவில் சத்ராங் (சத்ரஞ்ச்) என ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் இவ்விளையாட்டு இடைக்காலத்தின் பிற்பகுதியில் மத்திய ஐரோப்பாவை அடைந்து தற்காலத்திய சதுரங்க விளையாட்டாக உருப்பெற்றது. ஆரம்ப காலத்து சதுரங்கத்தின் சரியான விதிகள் தெரியவில்லை. சதுரங்க வரலாற்றாசிரியர்கள், இதன் விதிகள் பிற்கால பெர்சிய விளையாட்டின் விதிகளை ஒத்து இருக்க வேண்டும் என கருதுகின்றனர். ஆனால் சில விதிமுறைகளில் தெளிவு இல்லை, குறிப்பாக கஜாவின் (யானை) நகர்வுகள் குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளது.[1] சொற்பிறப்பியல்சமசுகிருத சதுரங்கா என்பது ஓர் கூட்டுச் சொல்லாகும், இதன் பொருள் "நான்கு உறுப்புகள் அல்லது பாகங்கள்" என்பதாகும். காவியக் கவிதைகளில் பெரும்பாலும் இது "படை" என்று பொருள்படும்.[2] இந்திய காவியமான மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு போர் அமைப்பிலிருந்து இந்த பெயர் வந்தது. சதுரங்கா என்பது யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை மற்றும் காலாட்படை என ஒரு படையின் நான்கு பிரிவுகளைக் குறிக்கிறது.[3] ஒரு பண்டைய போர் அமைப்பான அக்குரோணி, சதுரங்க அமைப்பைப் போன்றது.[4] வரலாறு![]() சதுரங்கத்தின் தோற்றம் பல நூற்றாண்டுகளாக ஒரு புதிராக இருந்து வருகிறது. ஆரம்பகால தெளிவான குறிப்பு வட இந்திய குப்தா பேரரசிலிருந்து வந்தது. பின்னர் இதை பற்றிய குறிப்புகள் கிபி ஆறாம் நூற்றாண்டு வட இந்தியாவிலிருந்து வந்தது. பாணபட்டரின் ஹர்சசரிதம் (கி.பி. 625) சதுரங்கா என்ற பெயரின் ஆரம்பக் குறிப்பைக் கொண்டுள்ளது.[5] சதுரங்கம் இந்து நூலான பவிசிய புராணத்தில் விவரிக்கப்பட்டது.[6] ஆனால், பவிசிய புராணம் நவீன சேர்த்தல் மற்றும் இடைச்செருகல்களை உள்ளடக்கியதாக அறியப்படுகிறது.[7] பழங்கால இந்திய பலகை விளையாட்டின் ஆரம்பக் குறிப்பு சில சமயங்களில் சுபந்துவின் வாசவதத்தையில் குறிப்பிடப்படுகிறது, இது கி.பி 5 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தேதியிடப்பட்டது. சதுரங்கம் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வேர்களைக் கொண்டிருக்கலாம். சிந்து சமவெளி நாகரிகத்தின் லோதல் நகரத்திலிருந்து கிமு 2000 முதல் 3000 வரையிலான தேதியிடப்பட்ட தொல்பொருட்களில் சதுரங்கத்தை ஒத்த பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[8] சில நிச்சயமற்ற தன்மைகள் இருந்தாலும், சதுரங்க வரலாற்றாசிரியர்களிடையே நிலவும் கருத்து என்னவென்றால், இது சியாங்கி (சீன), சாங்கி (கொரிய), சோகி (ஜப்பானிய), சிட்டுயின் பர்மிய), மகருக் (தாய்), அவுக் சத்ராங் (கம்போடிய) மற்றும் நவீன இந்திய சதுரங்கம் ஆகிய பலகை விளையாட்டுகளின் பொதுவான மூதாதையர் என கருதப்படுகிறது.[9] இது இந்தியாவிலிருந்து சாசானியப் பெர்சியாவில் சத்ராங் (சத்ரஞ்ச்) என ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் இவ்விளையாட்டு இடைக்காலத்தின் பிற்பகுதியில் மத்திய ஐரோப்பாவை அடைந்து தற்காலத்திய சதுரங்க விளையாட்டாக உருப்பெற்றது.[10] அரபு மொழியில், சதுரங்கத்தின் பெரும்பாலான சொற்கள் நேரடியாக சதுரங்கத்திலிருந்து பெறப்பட்டவை. நவீன சதுரங்கமே அரபு மொழியில் சதரஞ்ச் என்றும், அமைச்சர் (பிஷப்) யானை என்றும் அழைக்கப்படுகிறது.[11] 1694 இல் வெளியிடப்பட்ட தாமஸ் ஹைடின் டி லுடிஸ் ஓரியண்டலிபஸ் லிப்ரி டியோவில் இந்த விளையாட்டு முதலில் மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, விளையாட்டின் சமசுகிருத கணக்குகளின் மொழிபெயர்ப்புகள் வில்லியம் ஜோன்ஸால் வெளியிடப்பட்டது.[12] விளையாட்டுசதுரங்கம் அசுடபாதம் என்று அழைக்கப்படுகிற ஓர் 8×8 பலகையில் விளையாடப்பட்டது.[13] பலகையில் சில நேரங்களில் சிறப்பு அடையாளங்கள் இருந்தன, இதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. சதுரங்க வரலாற்றாசிரியர் முர்ரே, இதே அசுடபாதம் சில பழைய பந்தய வகை பகடை விளையாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டது, ஒருவேளை இந்த குறிகள் வேறு விளையாட்டிற்கு பயன்பட்டிருக்கலாம் எனக் கூறுகிறார். ஆரம்ப நிலையில் வெள்ளை மாற்றும் கருப்பு காய்கள் எதிர் திசையில் குறிப்பிடப்பட்ட ஒரு முறையில் வைக்கப்படுகின்றன. வெள்ளை காய்களை வைத்து ஆடுவபவர் முதலில் ஆட்டத்தை தொடங்குகிறார். சதுரங்கத்தின் நோக்கம், எதிராளியின் அரசனை இறுதி முற்றுகை இடுவது ஆகும்.[14]
மேற்கோள்கள்
நூல் பட்டியல்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia