சத்யமேவ ஜெயதே![]() சத்யமேவ ஜெயதே (தமிழ்: வாய்மையே வெல்லும், ஆங்கிலம்: Truth alone triumphs) என்பது முண்டக உபநிடத்தின் புகழ்பெற்ற ஒரு மந்திரத்தின் ஒரு பகுதியாகும்.[1] இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, 26 சனவரி 1950 அன்று, இந்தியா குடியரசாக மாறிய நாளில் இந்திய தேசிய குறிக்கோளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[2][3] இது அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதியின் அடிவாரத்தில் தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது, இந்திய தேசிய இலச்சினையின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ளது. அனைத்து இந்திய ரூபாய்களிலும், தேசிய ஆவணங்களிலும் சின்னம் மற்றும் "சத்யமேவ ஜெயதே" என்ற சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கும். தோற்றம் மற்றும் பொருள்இக்குறிக்கோள் முண்டக உபநிடதத்தில் 3.1.6வது மந்திரத்தில் உள்ளது. மந்திரமும் மொழிபெயர்ப்பும் பின்வருமாறு:
சுவாமி குருபரானந்தர் வழங்கிய தமிழ் உரை:
தமிழ்நாடு அரசு இலச்சினையில் தமிழாக்கம்![]() இந்தியா விடுதலை அடைந்த பிறகு, இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்நாடு அரசு இலச்சினையில் தேவநாகரி எழுத்தில் "சத்யமேவ ஜெயதே" என இருந்தது, இதை "வாய்மையே வெல்லும்" என்று 1967ஆம் ஆண்டு கா. ந. அண்ணாதுரை முதலமைச்சராக இருந்த காலத்தில் மாற்றப்பட்டது.[6][7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia