சந்திரேசு குமாரி கடோச்
சந்திரேசு குமாரி கடோச் (Chandresh Kumari Katoch)(பிறப்பு: பிப்ரவரி 1, 1944) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தின் முன்னாள் பண்பாட்டுத் துறை அமைச்சர் ஆவார். இவர் ஜோத்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினராக உறுப்பினராக இருந்தார்.[2] கடோச் 28 அக்டோபர் 2012 அன்று இந்திய அரசாங்கத்தில் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார். மேலும் இவருக்குக் கலாச்சார அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது.[3] இவர் ஜோத்பூரின் மகாராஜா அன்வந்த் சிங் மற்றும் மகாராணி கிருஷ்ண குமாரி ஆகியோரின் மகள் ஆவார். இவர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராஜா ஆதித்திய தேவ் சந்த் கடோச்சுடன் காங்க்ராவின் அரச குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார்.[4] இவர் 2014 இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[5] வகித்தப் பதவிகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia