அகில இந்திய மகளிர் காங்கிரசு
அகில இந்திய மகளிர் காங்கிரசு (All India Mahila Congress) என்பது இந்திய தேசிய காங்கிரசின் மகளிர் பிரிவாகும்.[1] மிகச் சமீபத்தில் இதன் தலைவி சுசுமிதா தேவ் 2021-ல் பதவி விலகியதால் தற்போது நெட்டா டிசோசா அகில இந்திய மகளிர் காங்கிரசின் செயல் தலைவராக 17 ஆகத்து 2021 அன்று காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டார்.[2][3][4] வரலாறுஇந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் 30,000 பிரதிநிதிகள் கலந்துகொண்ட 1984ஆம் ஆண்டின் மத்தியில் பெங்களூரில் நடைபெற்ற மாநாடுதான் இந்த அமைப்பின் ஆரம்பக்கால குறிப்பிடத்தக்கக் கூட்டமாகும்.[5] அமைப்புஅகில இந்திய மகளிர் காங்கிரசு மாநிலந்தோறும் கிளைகளாகப் பிரிக்கப்பட்டு, இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் oன்றிய பிரதேசங்களில் அகில இந்திய மகளிர் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநில மகளிர் காங்கிரசு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.[6]
தலைவர்களின் பட்டியல்
பொதுச்செயலர்அக்டோபர் 2015-ல், முன்பு திரைப்பட நடிகையாக இருந்த நக்மா, அலுவலக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[18] சனவரி 2019-ல் இந்தியத் தேசிய காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, அப்சரா ரெட்டியை தேசிய பொதுச் செயலாளராக நியமித்தார், ரெட்டி இப்பதவியினை வகிக்கும் முதல் திருநங்கை ஆவார்.[19] மார்ச் 2020-ல், ஐசுவர்யா மகாதேவ் இதன் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆகத்து 2021-ல், நெட்டா டிசோசா தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[20] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia