சந்திர ராஜேசுவர ராவ்
சந்திர ராஜேஸ்வர ராவ் (Chandra Rajeshwara Rao) (ஜூன் 6, 1914 - ஏப்ரல் 9, 1994) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட வீரராவார்.[1] இவர் தெலுங்கானா கிளர்ச்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தார் (1946-1951). இவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) பொதுச் செயலாளராக 28 ஆண்டுகள் பணியாற்றினார். 1992இல் உடல்நலக் காரணங்களுக்காக வேலையை விட்டுவிட்டார்.[2][3] வாழ்க்கைஇவர் ஒரு வசதியான விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். ஜூன் 6, 1914 அன்று இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தின் மங்களாபுரம் கிராமத்தில் பிறந்தார்.[4] வாரணாசியிலுள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்திலும், விசாகப்பட்டினத்திலுள்ள மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவக் கல்வியைப் பெற்றார். பின்னர் 1931இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் (சிபிஐ) சேர்ந்தார். 1954 - 1955இல் அகில இந்திய விவசாயிகள் அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார்.[5] திசம்பர் 1964 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய அமைப்பின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 1974இல் "லெனின் ஆணை" விருது வழங்கப்பட்டது. குடும்பம்இவரது மகன் சந்திர சந்திரசேகரும், பேரன் சந்திர ஜெய்தீப்பும் ஆந்திராவில் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.[2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia