சர்க்கி தாத்திரி மாவட்டம்
சர்க்கி தாத்திரி மாவட்டம் (Charkhi Dadri District) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். அரியானா மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த இப்புதிய மாவட்டம் 01 டிசம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது.[1][2][3] இதன் நிர்வாகத் த்லைமையிடம் சர்க்கி தாத்திரி நகரம் ஆகும். அமைவிடம்இம்மாவட்ட தலைமையிடமான சர்க்கி தாத்திரி நகரம், தில்லிக்கு தென்மேற்கில் 113 கி.மீ. தொலைவிலும்; சண்டிகரிலிருந்து 295 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மாவட்ட நிர்வாகம்சர்க்கி தாத்திரி மாவட்டம் சர்க்கி தாத்த்ரி மற்றும் பத்ரா எனும் இரண்டு வருவாய் வட்டங்களும், பௌந்து கலான் எனும் துணை வட்டமும் கொண்டது.[1][2] மேலும் இம்மாவட்டம் சர்க்கி தாத்திரி, பத்ரா, ஜோஜு, பௌந்து கலான் என 4 ஊராட்சி ஒன்றியகளையும், 172 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. மக்கள் தொகை பரம்பல்20111-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சர்க்கி தாத்திரி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,02,276 ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 67.04% ஆகவுள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia