சலங்கப்பாளையம்
சலங்கப்பாளையம் (ஆங்கிலம்:Salangapalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பவானி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். நெல், கரும்பு, மஞ்சள், வாழை போன்ற பயிர்கள் இப்பகுதியில் விளைவிக்கப்படுகிறது. மற்றும் மேலும் கால்மிதியடிகள் அதிகளவில் உற்பத்தியாகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமைவிடம்சலங்கபாளயம் பேரூராட்சியிலிருந்து ஈரோடு 22 கி.மீ.. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கே பவானி 14 கி.மீ..; மேற்கே கோபிச்செட்டிப்பாளையம் 13 கி.மீ..; வடக்கில் அந்தியூர் 30 கி.மீ..; தெற்கில் பெருந்துறை 18 கி.மீ.. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு24.24 ச.கி.மீ.. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 112 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பவானி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,668 வீடுகளும், 15,609 மக்கள்தொகையும் கொண்டது. [4] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia