சவிதா அம்பேத்கர்
சவிதா பீம்ராவ் அம்பேத்கர் (Savita Bhimrao Ambedkar) (27 சனவரி 1909 - 29 மே 2003), சாரதா கபீர் என்ற பெயரில் பிறந்த இவர் ஒரு இந்திய சமூக ஆர்வலரும், மருத்துவரும் மற்றும் இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரின் இரண்டாவது மனைவியுமாவார். அம்பேத்கரை பின்பற்றுவரகளும், பௌத்த மதத்தினரும் இவரை மா அல்லது மாசாகேப் (மராத்தி மொழியில் அம்மா) என்று அழைத்தனர்.[1][2] அம்பேத்கரின் பல்வேறு இயக்கங்களில், புத்தகங்கள், இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்து குறியீடு சட்டங்கள் மற்றும் தலித் பௌத்த இயக்கங்களின் போது, இவர் அவ்வப்போது அவருக்கு உதவினார். எட்டிலிருந்து பத்து ஆண்டுகளாக தனது வாழ்க்கையை நீட்டித்ததற்காக அம்பேத்கர் தனது "புத்தரும் அவரது தம்மமும்" என்ற புத்தகத்தின் முன்னுரையில் இவருக்கு பெருமை சேர்த்துள்ளார்.[3] ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்1909 சனவரி 27 அன்று மும்பையில் ஒரு மராத்தி பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது பிறந்த பெயர் "சாரதா கபீர்" என்பதாகும். இவரது தாயின் பெயர் ஜானகி, தந்தையின் பெயர் கிருட்டிணராவ் விநாயக் கபீர். மகாராட்டிராவின் இரத்னகிரி மாவட்டத்தின் இராசபூர் வட்டத்திலுள்ள தோர்சு கிராமத்தில் இவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். பின்னர், இவரது தந்தை இரத்னகிரியிலிருந்து மும்பைக்கு வந்தார்.[4] [5] [6] இவர் ஒரு சிறந்த மாணவியாக இருந்தார். இவரது ஆரம்ப கல்வி புனேவிலிருந்தது. அதன்பிறகு, 1937 இல் மும்பையின் கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். இவரது படிப்பு முடிந்ததும், குசராத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் முதல் வகுப்பு மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் சில மாதம் நோய்வாய்ப்பட்ட பிறகு, இவர் வேலையை விட்டுவிட்டு வீடு திரும்பினார். இவரது எட்டு உடன்பிறப்புகளில் ஆறு பேர் சாதி திருமணங்களைக் கொண்டிருந்தனர். அந்த நாட்களில் அது மராத்தி பிராமணருக்கு ஒரு அசாதாரண விஷயமாகும். சவிதா, "எங்கள் குடும்பம் சாதியினருக்கு இடையிலான திருமணங்களை எதிர்க்கவில்லை. ஏனென்றால் முழு குடும்பமும் படித்த மற்றும் முற்போக்கானது." என்றார்.[7] அம்பேத்கருடன்![]() மும்பையின் வைல் பார்லியிலிருந்த, எஸ். ஆர். இராவ் என்ற மருத்துவர் அம்பேத்கருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தில்லியிலிருந்து மும்பைக்கு அம்பேத்கர் வந்தபோது, அடிக்கடி மருத்துவரை சந்திப்பார். மருத்துவர் இராவின் வீட்டிற்கு குடும்ப உறவு இருந்ததால் சாரதா கபீரும் வீட்டிற்கு வருவார். பாபாசாகேப் அப்போது இந்தியத் தலைமை ஆளுநரின் செயற்குழுவில் தொழிலாளர் அமைச்சராக இருந்தார். அம்பேத்கரின் ஆளுமையால் சாரதா ஈர்க்கப்பட்டார். இவரது முதல் சந்திப்பில், அம்பேத்கர் ஒரு அசாதாரண மற்றும் சிறந்த நபர் என்பதை உணர்ந்தார். இந்த முதல் கூட்டத்தில், அம்பேத்கர் கபீரைப் பற்றி அக்கறையின்மையுடன் விசாரித்தார். இதற்குக் காரணம் இவரும் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதே ஆகும். அம்பேத்கர் இவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பௌத்தம் பற்றிய விவாதமும் நடைபெற்றது. [8][9] அவரது இரண்டாவது சந்திப்பு டாக்டர் மவலங்கரின் ஆலோசனை அறையில் நடந்தது. அம்பேத்கருக்கு அப்போது இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் மூட்டு வலி இருந்தது. அவர் தூங்கவில்லை. கால்களில் நரம்பியல் வலி இருப்பதால், இன்சுலின் மற்றும் சில ஓமியோபதி மருந்துகள் ஓரளவிற்கு நிவாரணம் அளிக்கும். அவர் சிகிச்சைக்காக மும்பை சென்றார். அதே நேரத்தில், டாக்டர் சாரதா சிகிச்சையின் போது அம்பேத்கரை நெருங்கி வந்தார். அம்பேத்கரின் முதல் மனைவி ரமாபாய் அம்பேத்கர் 1935 இல் நீண்ட நோயால் இறந்தார். 1947 ஆம் ஆண்டில், இந்திய அரசியலமைப்பை எழுதும் போது, பீம்ராவ் அம்பேத்கருக்கு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டன. 1947 ஆம் ஆண்டில், அம்பேத்கர் தனது உடல்நிலை குறித்து கவலைப்படத் தொடங்கினார். இயற்கை காரணங்களுக்காக மருத்துவர் சாரதா கபீரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். [10][11] திருமணம்![]() ஏப்ரல் 15, 1948 அன்று சாரதா கபீர் பீம்ராவ் அம்பேத்கரை மணந்தார். அப்போது இவருக்கு வயது 39, அமேத்கருக்கு வயது 57. அவர்களது திருமணத்திற்குப் பிறகு, அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள் இவரை பிரபலமாக "மா" (தாய்) என்று அழைத்தனர். திருமணத்திற்குப் பிறகு சாரதா 'சவிதா' என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். ஆனால் அம்பேத்கர் இவரை "செரா" என்று பழைய பெயரில் அழைப்பார்.[12][13] பௌத்த மதத்திற்கு மாற்றம்![]() 1956 14 அக்டோபர் அன்று அசோக விசய தசமி (பௌத்த மதத்தை பேரரசர் அசோகர் ஏற்றுக்கொண்ட நாள்), சவிதா அம்பேத்கர் தனது கணவர் பீம்ராவ் அம்பேத்கருடன் நாக்பூரிலுள்ள தீக்சாபூமியில் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டார். இந்த மாற்றத்தின் மூலம் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்ட முதல் பெண்மணியாக சவிதா அம்பேத்கர் ஆனார். [14][15] குற்றச்சாட்டுகள் மற்றும் முரண்பாடுகள்அம்பேத்கர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் தில்லியிலிருந்து பலர் அம்பேத்கரை சந்திக்க வந்தனர். சவிதா அம்பேத்கருக்கு மனைவியாகவும் அவரது மருத்துவராகவும் ஒரு இரட்டை பொறுப்புகள் இருந்ததால் அவரது உடல்நலத்தைக் காரணம் காட்டி மறுத்துவிட்டார்.[16] அம்பேத்கரின் மரணத்திற்குப் பிறகு, சில அம்பேத்கர் இயகத்தினர் இவர் அம்பேத்கரைக் கொன்றதாக குற்றம் சாட்டினர். இவர் ஒரு பிராமணர் என்பதால் அம்பேத்கர் இயக்கத்திலிருந்து விலகி இருந்தார். தில்லியில் உள்ள மெக்ராலியிலுள்ள பண்ணை இல்லத்திற்கு சென்றார். 1972 வரை, இவர் அங்கு வசித்து வந்தார். அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார். மேலும் அந்தக் குழு விசாரணையின் பின்னர் இவரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது. [17][18] பாபாசாகேப்பின் மறைவுக்குப் பிறகு, பிரதமர் ஜவகர்லால் நேரு, பிரதமர் இந்திரா காந்தி மற்றும் குடியரசுத் தலைவர் சர்வேபள்ளி சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆகியோர் இவரை மாநிலங்களவைக்கு நிற்க வற்புறுத்தினர். ஆனால் அவர் கணவரின் கொள்கையை காரணம் காட்டி மூன்று முறையும் மறுத்துவிட்டார்.[19] தலித் இயக்கத்துடன் திரும்பியதுஇந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அதவாலே மற்றும் கங்காதர் காதே ஆகியோர் இவரை மீண்டும் பிரதான அம்பேத்கரைய இயக்கத்திற்கு அழைத்து வந்தனர். "தலித் சிறுத்தைகள்" என்ற இயக்கத்தின் இளம் ஆர்வலர்கள் இவரை மரியாதையுடன் நடத்தினர். "இந்து மதத்தில் புதிர்கள்" புத்தகத்தைப் பற்றிய இயக்கத்தில் இவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். இவரது பாத்திரம் இவரது மரியாதையைப் பெற்ற. மேலும் தலித்துகளின் தவறான புரிதலிலிருந்து விடுபட்டது.[20] பிற்காலத்தில், தனக்கு வயதாகும்போது அங்கிருந்து பிரிந்தார். அம்பேத்கருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமை விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது. அம்பேத்கரின் பிறந்தநாளான 1990 ஏப்ரல் 14இல் அப்போதைய குடியரசுத் தலைவர் ரா. வெங்கட்ராமன் சவிதா அம்பேத்கரிடம் வழங்கி கௌரவித்தார்.[21] இறப்புகணவர் இறந்த பிறகு சவிதா அம்பேத்கர் தனிமையில் இருந்தார். பின்னர், இவர் மீண்டும் தலித் இயக்கத்தில் சிறிது காலம் சேர்ந்தார். ஏப்ரல் 19, 2003 அன்று, இவர் சுவாசிப்பதில் சிரமங்களை சந்தித்தார், மேலும் ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் 29 மே 2003 அன்று தனது 94 வயதில் மும்பையில் உள்ள ஜே.ஜே மருத்துவமனையில் காலமானார்.[22] [23] எழுத்துக்கள்இவர் ஒரு மறக்கமுடியாததும் சுயசரிதையுமான "டாக்டர் அம்பேத்கராஞ்ச்யா சக்வாசத்" ( டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து ) என்ற மராத்தி புத்தகத்தை எழுதினார். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் படத்திற்கும் இவர் பங்களித்தார். இந்த படத்தில் மிருனாள் குல்கர்னி இவரது கதாபாத்திரத்தில் நடித்தார்.[24] சவிதா அம்பேத்கர் பற்றிய புத்தகங்கள்
மேலும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia