சவொலின் மடாலயம்
சவொலின் மடாலயம் அல்லது சவொலின் கோவில் (Chinese: 少林寺; pinyin: Shàolín Sì) என்ற புத்த கோவில் சீன நாட்டில் ஹெனான் மாகாணத்தில் டென்க்பெங் நகரில் ழேங்க்ழோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. இப்பெயர் ஏழு சிகரங்களை கொண்ட ஹயாஷி மலைகளின் காடுகள் என்பதை குறிக்கிறது. 1,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சவொலின் மடாலயம் பௌத்தர்களின் பிரதான கோவிலாக உள்ளது. சவொலின் மடாலயம் மற்றும் பொகடா காடுகளை, யுனெஸ்கோ நிறுவனம், 2010 ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.[1] நிறுவுதல்முதல் சவொலின் மடாலயம் இந்தியாவிலிருந்து வந்த தியான பயிற்சியாளர் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த கிரேக்க புத்தரால் கி.பி.464 இல் புத்த மதத்தை பரப்ப உருவாக்கப்பட்டது.[2] டாவ்சோனின் தலைசிறந்த துறவிகளின் தொடர்ச்சியான சுயசரிதைகள் மூலம் கி.பி 477 ஆம் ஆண்டு வடக்கு வேய் வம்சத்தால் சவொலின் வடக்கு பக்கத்தில் புனித மலைகளின் ஒன்றான பாடல் மலையின் நடுச்சிகரத்தில் கட்டப்பட்டது என அறிய முடிகிறது. எனினும் போதிதர்மர்தான் இங்கு பாரம்பரிய தற்காப்பு கலைகளை நிறுவினார். இம்மடாலயம் பலமுறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. சவொலின் கோவிலிலுள்ள கட்டிடங்கள்இம்மடாலயத்தின் உட்புற அளவு 160 x 360 மீட்டர் அதாவது 57, 600 மீட்டர் பரப்பளவு ஆகும். இம்மடாலயம் 7 முக்கிய அரங்குகளையும், 7 மற்ற அரங்குகளையும் மற்றும் நிறைய முற்றங்களையும் கொண்டுள்ளது. மேலும், கோயிலின் கட்டமைப்பு பின்வருவனவற்றையும் கொண்டுள்ளது.
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia