ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு33°13′N 103°55′E / 33.217°N 103.917°E
ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு இயற்கை காப்பகம் ஆகும். இது பல மட்டங்களில் அமைந்த அருவிகளுக்கும், பல நிறங்களிலான ஏரிகளுக்கும் பெயர் பெற்றது. 1992 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. காக்கப்பட்ட பகுதிகளுக்கான IUCN வகைப்பாட்டு முறைமையின்படி, இது வகை V (காக்கப்பட்ட நிலத்தோற்றம்) என்பதற்குள் அடங்கும்.[1][2][3] புவியியலும் காலநிலையும்ஜியுசாய்கோ மின்ஷான் மலைத் தொடரின் தென் முனையில் மாகாணத் தலைநகரான செங்டுவுக்கு வடக்கே 330 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் நான்பிங் கவுண்டி என அழைக்கப்பட்ட ஜியுசாய்கோ கவுண்டியின் ஒரு பகுதியாகும். இவ்விடம் சிச்சுவான் மாகாணத்தில், அதன் கான்சு மாகாணத்துடனான எல்லைக்கு அருகிலுள்ள ஆபா திபேத்திய கியாங் தன்னாட்சி அதிகாரஎல்லைப் பகுதிக்கு உட்பட்டது. இப்பள்ளத்தாக்கு குறைந்தது 240 சதுர கிலோமீட்டர் பரப்பளவைத் தன்னுள் அடக்கியுள்ளது. சில காப்பு நிறுவனங்கள், 400 - 600 சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட இடைநிலைப் பகுதிகளையும் உள்ளடக்கி, இதனை 600 - 700 சதுர கி.மீ. என்கின்றன. இப்பகுதியின் உயரம் ஷுசெங் நீர்வெளியேற்றப் பகுதிக்கு அண்மையில் 1,998 - 2,140 மீட்டர்கள் தொடக்கம் கான்சிகொங்காய் மலையில் உள்ள செச்சாவா நீர்வெளியேற்றப் பகுதியில் 4,558 - 4,764 மீட்டர்கள் வரை வேறுபடுகின்றது. இவற்றையும் பார்க்கவும்வெளியிணைப்புக்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia