சாமுண்டீஸ்வரி கோயில்
சாமுண்டி கோயில் (Chamundeshwari Temple) (ಶ್ರೀ ಚಾಮುಂಡೇಶ್ವರಿ ದೇವಸ್ಥಾನ) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும்.[1] சாமுண்டீஸ்வரி அம்மன், மைசூர் இராச்சியத்தின் காவல் தெய்வம் ஆகும். மகாசக்தி பீடங்கள்சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் சாமுண்டிக் கோயில், 18 மகாசக்தி பீடங்களில் ஒன்றாகும். வரலாறு![]() சாமுண்டிக் கோயில் பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர்களால் கட்டப்பட்டிருந்தாலும், கோயில் கோபுரம் விஜயநகர மன்னர்களால் பொ.ஊ. 17ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. சாமுண்டி மலையில் 3000 அடி உயரத்தில் அமைந்த இக்கோயிலுக்குச் செல்ல, பொ.ஊ. 1659-இல் ஆயிரம் படிக்கட்டுகள் நிறுவப்பட்டது.[2] சாமுண்டி மலையில் 800வது படிக்கட்டில் அமைந்துள்ள சிறு சிவன் கோயிலுக்கு எதிரில் 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்ட கருங்கல் நந்தி சிலை உள்ளது. இச்சிற்பம் பொ.ஊ. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். படக்காட்சிகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia