திருமாக்கூடல் நரசிபுரம்
![]() திருமாக்கூடல் நரசிபுரம் (Tirumakudalu Narasipura or Tirumakūḍalu Narasīpura) (கன்னடம்): ತಿರುಮಕೂಡಲು ನರಸೀಪುರ) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் கோயில் நகரம் எனப்பெயரெடுத்த இந்நகரத்தை டி. நரசிபுரா என்றும் அழைப்பர். இது மைசூர் மாவட்டத்தின் திருமாக்கூடல்நரசிபுரம் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், பேரூராட்சியும் ஆகும். இந்நகரத்தில் காவேரி ஆறு, கபினி ஆறு மற்றும் சப்திகா ஏரியில் கலப்பதால் இந்நகரத்திற்கு திருமாக்கூடல்நரசிபுரம் எனப்பெயராயிற்று.[2] இவ்வூரில் புராதன குஞ்ச நரசிம்மர் கோயில் அமைந்திருப்பதால் இவ்வூருக்கு நரசிபுரம் எனப்பெயராயிற்று. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 11 வார்டுகள் திருமாக்கூடல் நரசிபுரம் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 9,980 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 4,998 மற்றும் பெண்கள் 4,982 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 997 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 985 (9.87 %) ஆகும். சராசரி எழுத்தறிவு 77.59 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 91.65%, இசுலாமியர்கள் 6.77%, சமணர்கள் 1.30% மற்றும் பிற சமயத்தினர் 0.27% ஆக உள்ளனர்.[3] அமைவிடம்![]() திருமாக்கூடல் நரசிபுரம் பேரூராட்சி மைசூருக்கு தென்கிழக்கே 29 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூரிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் நஞ்சன்கூட்டில் அமைந்துள்ளது. புகழ்பெற்றவர்கள்
படக்காட்சியகம்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia