சாரு சந்திர பிஸ்வாஸ்
சாரு சந்திர பிஸ்வாஸ் (Charu Chandra Biswas) (இந்தியப் பேரரசின் ஆணை) (21 ஏப்ரல் 1888 - 9 டிசம்பர் 1960) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். தொழில்கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பிஸ்வாஸ் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஏகாதிபத்திய பிரித்தானிய அரசாங்கம் 1931 பிறந்தநாள் மரியாதை பட்டியலில் இவரை இந்தியப் பேரரசின் (CIE) தோழனாக நியமித்தது. பிப்ரவரி 1940 இல், இவர் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பின்னர் 1949-50 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் நியமிக்கப்பட்டார்.. இவர், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு 1952 முதல் 1960 வரை மேற்கு வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1953 முதல் 1954 வரை மாநிலங்களவியில் தலைவராக இருந்தார். இவர் மாநில அமைச்சராகவும், பின்னர் மத்திய சட்டம், சிறுபான்மை விவகார அமைச்சராகவும் இருந்தார்.[2][3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia