சிமிழி ஊராட்சி
அடிப்படை வசதிகள்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]
அமைவிடம்திருவாரூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருவாரூரிலிருந்து 14 கி.மீ.தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது. சிற்றூர்கள்இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:
குடவாசல் வட்டத்தில் உள்ள தலையாலங்காடு 53 சிமிழி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூராக, குடவாசலுக்கு கிழக்காக சுமார் 8.கி.மீ தொலைவில் குடவாசல்–திருவாரூர் நெடுஞ்சலையை ஒட்டியப்பகுதியில் சோழசுடமணியாற்றின் வடகரையில் அமையப்பெற்றுள்ளது. “தலையாலங்கானம்,” “ஆலங்கானம்” என்று மதுரைக் காஞ்சி, அகநானூறு, (அகம்-36-116-175-209) புறநானூறு(புறம்-371-372) போன்ற சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெறும் ஊர் குடவாயிலை அடுத்த தேவாரம் பாடப்பெற்ற ஊரான தலையாலங்காடு என்று அறியமுடிகிறது. ஆலங்கானம் சோழநாட்டு ஊராகக் கருதத்தக்கது என தமிழக வரலாற்றுக் குழுவினர் தம் நூலில் குறித்துள்ளனர். சேரன்,சோழன் மற்றும் வேளிர் ஐவரை பாண்டியன் நெடுஞ்செழியன் இவ்வூரில் வென்றான் என்பது வரலாறு. (தமிழ்நாட்டு வலராறு (1983) சங்க காலம் ப.253) இவ்வூரில் அப்பர் தேவாரப் பாடல்பெற்ற., சிவத்தலங்களுள் 93 வது தலமாக விளங்கும் கோயில் (நர்த்தனபுரீஸ்வரர்) உள்ளது. திருநாவுக்கரசர் தனது தேவாரப்பதிகங்ளில் இவ்வூரினை தலையாலங்காடு என்றே குறிப்பிட்டு பாடியுள்ளார் மேலும் இறைவனது பெயர் தலையாலங்காடன் என அறியமுடிகிது.
இடைக்கால கல்வெட்டுகளில் இக்கோயில் இறைவன் பெயர் ஆடவல்லவீசுவரர். இறைவி பெயர் திருமடந்தையம்மை. என அறியமுடிகிறது. ஆடவல்லவீசுவரர் என்ற பெயரே சமஸ்கிருதமாக்கப்பெற்று நர்த்தனபுரீஸ்வர் என்று தற்போது வழங்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டின் வாயிலாக முதலாம் இராஜராஜனின் 6 வது ஆட்சி ஆண்டு அளிக்கப்பட்ட தேவ தானங்களும் அருமை உடையார் குமாரன் செண்டானாதர் உடையார் மகாமண்டபம் கட்டித்தந்த செய்தியும், அம்பர் அருவந்தை அரயன் சிவதவனப் பெருமானான காளிங்கராஜன் என்பவர் இக்கற்றளியைத் திருப்பணி செய்த தகவலையும் அறிய முடிகிறது. (இ.க.ஆ.அ175-1927-28) பள்ளிஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா உதவிபெறும் துவக்கப்பள்ளி. அருகிலுள்ள கிராமங்கள்அருகிலுள்ள நகரங்கள்
சான்றுகள்
5. இரா. சுரேஷ்-நன்னிலம் வட்டார உழுக்குடி சமூகமும், வாழ்விடங்களும் (சோழமண்டலம் ) வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வுகள்- முனைவர் பட்ட ஆய்வேடு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை தமிழ்ப்பல்க்கலைக்கழகம் தஞ்சாவூர் வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia