கருவாக்குறிச்சி ஊராட்சி
கருவாக்குறிச்சி ஊராட்சி (Karuvakkuruchi Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2360 ஆகும். இவர்களில் பெண்கள் 1180 பேரும் ஆண்கள் 1180 பேரும் உள்ளனர். அடிப்படை வசதிகள்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
சிற்றூர்கள்இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
கருவாக்குறிச்சிகருவாக்குறிச்சி (கருவை) கிராமமானது 12 கி. மீ. தொலைவில் மன்னார்குடிக்கு மேற்கு திசையிலும், 13 கி. மீ. ஒரத்தநாட்டிற்கு கிழக்குத் திசையிலும், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தின் எல்லையாக உள்ளது. இதன் அருகில் மன்னார்குடி தொடர்வண்டி நிலையம் உள்ளது. இந்தக் கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் (கருவாக்குறிச்சி காலனி மற்றும் வெட்டிக்காடு தவிர்த்து) வசித்து வருகின்றனர். இவற்றுள் 90% பேர் முக்குலத்து சமுதாயத்தைச் சேர்ந்த கள்ளர் சாதியின் கண்டியர், ஓந்தரியர், தொண்டமான், மாளுசுத்தியார், களப்பாடியார், காளிங்கராயர், வடிவிராயர் மற்றும் சிட்டாச்சியார் போன்றவர்கள் ஆவர். மேலும் கோனார், பறையர் மற்றும் அம்பலகாரர் போன்ற சாதியினரும் ஒற்றுமையாக வசித்து வருகின்றனர். மிகப்பெரிய ஊராட்சி என்பதனால் நிர்வாக வசதிக்காக வெட்டிக்காடு என்னும் சிற்றூர் பேரையூர் பஞ்சாயத்துடனும், கருவாக்குறிச்சி காலனி என்னும் சிற்றூர் முக்குளம் சாத்தனூர் பஞ்சாயத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் 800 ஆண்டுகள் பழமையான வரதராஜபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை சுற்றி அரசினர் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அங்காடி ஆகியவைகள் ஒருங்கே அமைந்துள்ளன. மேலும் ஆங்கில வழிக் கல்வியை விரும்பும் மாணவர்களுக்காக திருமுருகன் ஆங்கிலப்பள்ளி, கருவாக்குறிச்சி சாவடி அருகில் அமைந்துள்ளது. பெரிய ஊராட்சி என்பதால் மாணவர்களின் கல்வி நலனை மனதில் கொண்டு கருவாக்குறிச்சி காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia