சிறீபதி மிசுரா
சிறீபதி மிசுரா (Sripati Mishra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1923 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உத்தரப் பிரதேச மாநில அரசியலில் இயங்கினார். 1980- ஆம் ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். பிறப்புசிறீபதி மிசுரா சுல்தான்பூரில் உள்ள சேசுபூர் கிராமத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் [1] பிறந்தார். அரசியல் வாழ்க்கைசிறீபதி மிசுரா முதன்முதலில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டில் அதன் அவைத்தலைவரானார், இந்த அலுவலகத்தில் 1980 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 ஆம் தேதி முதல் 1982 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி வரை இருந்தார் [2] 1982 ஆம் ஆண்டு விசுவநாத் பிரதாப் சிங் பதவி விலகல் செய்த பின்னர் இவர் முதலமைச்சரானார் [3] 1982 ஆம் ஆண்டு சூலை மாதம் 19 ஆம் தேதி முதல் 1984 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 3 ஆம் தேதி வரை பதவியில் இருந்தார் [4] யோகேந்திர நரேன் இவரது முதன்மை செயலாளராக பணியாற்றினார். [5] பின்னர், 1984 ஆம் ஆண்டில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கிராம அரசியலில் இருந்து மாநிலத்தின் முதல் இடத்தை அடைந்த சில அரசியல்வாதிகளில் சிறீபதி மிசுராவும் ஒருவராவார். . மேலும், உத்தரபிரதேச வழ்க்கறிஞர்கள் குழுவின் மூத்த உறுப்பினராகவும் இருந்தார். [6] இறப்புசிறீபதி மிசுரா நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு லக்னோவில் உள்ள பல்ராம்பூர் மருத்துவமனையில் காலமானார். [7] மற்றவைசிறீபதி மிசுரா பட்டக் கல்லூரி என்ற ஒரு கல்லூரி .உத்தரபிரதேசம், சுல்தான்பூரில் இவரது நினைவாக நிறுவப்பட்டது, தற்போது இந்த கல்லூரி மாவட்டத்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். [8] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia