சுவாமி அபேதானந்தர்
சுவாமி அபேதானந்தர் (2 அக்டோபர் 1866 - 8 செப்டம்பர் 1939) ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது பெற்றோர் ரசிக்லால் சந்திரர் - நயனதாரா தேவி.தேர்ந்த ஆன்மீகக் குருவைத் தேடிய காளி பிரசாத் சந்திரன் 1884 சூன் மாதம் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார். அமெரிக்காவிலும் சுவாமி விவேகானந்தரின் கட்டளைப்படி சேவை செய்தார். சுவாமி அபேதானந்தரின் மறைவு குறித்த செய்த அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.[1] வ.உ.சிதம்பரனாரின் வரவேற்பு1906 ஆம் ஆண்டு சூன் 29 ஆம் தேதியன்று இலங்கையிலிருந்து தூத்துக்குடி வந்து இறங்கிய சுவாமி அபேதானந்தருக்கு வ.உ.சிதம்பரனாரும் மற்ற பல தூத்துக்குடி பிரமுகர்களும் வித்தியாசமான வரவேற்பு அளித்தனர்.[2] பாரதியாரின் கவிதை1906 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் தேதி சுவாமி அபேதானந்தர் சென்னைக்கு வரவிருந்ததை அறிந்த பாரதியார், தம் ’இந்தியா’ இதழில் எழுதியதுடன், சுவாமி அபேதானந்தரை வாழ்த்தி 32 வரிகளில் கவிதை படைத்தார். அந்தக் கவிதையின் இறுதிப் பகுதி: தூயாஅபே தாநந் தனெனும் பெயர்கொண் சென்னை வந்த சுவாமி அபேதானந்தர், ’வேதாந்த மதத்தின் உலகளாவிய தன்மை’ என்ற தலைப்பில் சென்னை டவுன் ஹால் வெளி மைதானத்தில் ஐயாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் ராவ்பகதூர் எம்.ஆதிநாராயணய்யா தலைமையில் சொற்பொழிவாற்றினார். பாரதியாரும் இக்கூட்டத்திற்கு சென்றுள்ளது அவர் தமது இந்தியா பத்திரிக்கையில் இச்சொற்பொழிவைப் பற்றி உணர்ச்சியுடன் எழுதியதின் மூலம் தெரியவருகிறது.[1] ’பிரக்ருதீம் பரமாம்’அன்னை சாரதா தேவியின் மீது இவர் இயற்றிய ’பிரக்ருதீம் பரமாம் அபயாம் வரதாம்’ எனும் பாடலைக் கேட்டு அன்னை சாரதா தேவி, ’சரசுவதி தேவி உனது நாக்கில் எழுந்தருள்வாள்’ என்று கூறி ஆசிர்வதித்தார்.[1] நூல்கள்
ராமகிருஷ்ண வேதாந்த சொசைட்டி
டார்ஜிலிங்கில்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia