சூர்யா கிரண் (இயக்குநர்)
சூர்யா கிரண் ( Surya Kiran, 6 செப்டம்பர் 1974 – 11 மார்ச் 2024) தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றிய ஒரு இந்திய இயக்குநரும் மற்றும் நடிகரும் ஆவார். அக்கினேனி நாகார்ஜுனா நடிப்பில் 2033இல் வெளியான சத்யம் படத்தை இயக்கி பிரபலமானவர்.[1] இவர் தெலுங்குத் தொலைக்காட்சி உண்மைநிலை நிகழ்ச்சியான பிக் பாஸ் தெலுங்கு 4 இல் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் 7 ஆம் நாளிலேயே வெளியேற்றப்பட்டார்.[2][3] தொழில் வாழ்க்கைஇவர் மாஸ்டர் சுரேஷ் என்ற தனது மேடைப் பெயரில் இருநூறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக பணியாற்றினார்.[4] வெற்றிகரமான சத்யம் (2003) மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது பெரும் வரவேற்ப்பைப் பெற்றது.[5][6] தொடர்ந்து பிரம்மாஸ்திரம் , ராஜுபாய் போன்ற தெலுங்கு படங்களையும் இயக்கினார்.[7] சொந்த வாழ்க்கைசூர்யா கிரண், டி. எஸ். மணி மற்றும் ராதாவுக்கு தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். இவரது குடும்பம் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தது. இவரது தங்கை சுஜிதா தனுஷ் ஒரு நடிகை ஆவார். சமுத்திரம் , காசி போன்ற படங்களில் நடித்த நடிகை காவேரியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கருத்து வேற்பாட்டால் விவாகரத்து செய்தர். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த கிரண் தனது 48வது வயதில், 2024 மார்ச் 11 அன்று சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார்.[8][9]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia