செம்பருத்தி (தொலைக்காட்சித் தொடர்)
செம்பருத்தி என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 16, 2017ஆம் ஆண்டு முதல் 31 ஜூலை , 2022ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழி தொடரான 'முத்த மந்தரம்' என்ற தொடரின் கதை அம்சத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் / வி.ஜே. அக்னி மற்றும் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஷபானா நடித்தனர்.[1][2] இந்த தொடர் தமிழ் மக்களால் அதிகம் பார்க்கப்படும் சிறந்த 5 தொடர்களுக்குள் முதன்மையானதாக இருந்தது. இந்த தொடர் கிராமத்தில் இருந்து வந்து, பணிப்பெண்ணாக இணைந்த, மருமகளான பார்வதியைப் பற்றிய கதை. அகிலாண்டேஸ்வரி என்ற பணக்காரப் பெண்மணியின் மகன் ஆதித்யா, பார்வதி என்ற வேலைக்காரப் பெண் மீது கொண்ட காதலினால் ஏற்படும் திருப்பங்களையும், அவர்களுக்கு இடையே உள்ள காதல் நிகழ்ச்சிகளையும் மையமாகக் கொண்ட ஒரு குடும்பத் தொடர் ஆகும்[3] கதைச் சுருக்கம்பணக்கார மற்றும் உயர் வகுப்பு பெண் அகிலாண்டேஸ்வரி, அங்கு அவரது மகன் ஆதித்யா பார்வதியை காதலிக்கிறார். பார்வதி, பாட்டி இறந்த பிறகு, அகிலாண்டேஸ்வரி வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்ய முடிவு செய்கிறாள். இதற்கிடையில், அகிலாண்டேஸ்வரி ஒரு வலுவான விருப்பமுள்ள, பிடிவாதமான பெண்மணி, எல்லாவற்றிலும் முழுமையை விரும்புகிறார். ஆதித்யா தனது தாய்க்குத் தெரியாமல் பார்வதியை திருமணம் செய்து கொண்டார். அது போக திருட்டுத்தனமாக தாலி கட்டிய தனது மனைவியை பற்றி தனது தாயாரிடம் சொல்லாமால் ஆதி நாட்களை கடத்திக் கொண்டு செல்கிறார். இப்படியான எந்தவொரு செயலையும் பொதுவாக பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பார்வதியின் தந்தை சுந்தரம் அகிலாண்டேஸ்வரியின் குடும்பத்தில் 25 ஆண்டுகள் ஓட்டுநராக பணியாற்றினார். அகிலாண்டேஸ்வரிக்கு அவர் மிகவும் விசுவாசமாக இருக்கும் இடத்தில், ஆதி மீதான பார்வதியின் காதல் அவருக்குத் தெரியாது. மறுபுறம், அவர்கள் ரகசியமாக திருமணம் செய்துகொள்கிறார்கள், அங்கு இந்த திருமணத்திற்கு ஆதித்யாவின் தந்தை புர்ஷோத்தமன், ஆதித்யாவின் சகோதரர் அருன் மற்றும் அருனின் மனைவி ஐஸ்வரியா ஆகியோரும் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். இந்த மூன்று பேரும் அகிலாண்டேஸ்வரியிடமிருந்து உண்மையை மறைக்கிறார்கள். அகிலாண்டேஸ்வரியின் மைத்துனரான வனஜா என்ற தீய எண்ணமுடைய பெண்ணின் காரணமாக ஆதித்யாவும் பார்வதியும் தங்கள் திருட்டு திருமண காதல் வாழ்க்கையில் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். வனஜா ஒரு தீய மற்றும் தந்திரமான பெண், அங்கு அவர் குடும்பத்தை பிளவுபடுத்தவும், அகிலாண்டேஸ்வரிக்கு அவமானத்தை ஏற்படுத்தவும் பல முறை திட்டமிட்டுள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் பார்வதி அகிலாண்டேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தின் கண்ணியத்திற்கு மீட்பராக மாறுகிறார். ஒரு கட்டத்தில் அகிலாண்டேசுவரிக்கு அவமானம் நிகழும் என தனது ஞானதிருஷ்டியால் பார்வதி உணருகிறார் (எப்படி என்று கேட்டால் நீங்கள் சமூக விரோதி) அதை சொல்லியும் கேட்காமல் அகிலாண்டேசுவரி தன்னுடைய திமிர்த்தனத்தாலும் அகம்பாவத்தாலும் மாட்டிக் கொள்கின்றார். இந்த இடத்தில் பார்வதிக்கு புதுசாக ஒரு ஆள் கணவனாக வருகிறார். பாவிப்பய வந்த நேரத்துல இருந்து ஒரே சண்டைக்காட்சியாக வைத்து டைரக்டர் அவரை புஜபலபராக்கிரமசாலி போல காட்ட முனைகிறார். அப்படி அகிலாண்டேசுவரி மாட்டிக் கொண்டதால், அவருக்காக பூமி பூஜை செய்கிறார் பார்வதி, அதாவது மாமியார் இறந்துவிட்டால் கூடவே உடன்கட்டை ஏறும் அளவுக்கு முட்டாள் மருமகளாக இருக்கிறார் பார்வதி. ஆனால் இந்த ஜோடியின் உணர்ச்சிமிக்க திருட்டு காதல் கதையில், யார் மிகப்பெரிய எதிரியாக நிற்கிறார்கள் என்பது ஆதித்யாவின் முன்னாள் வருங்கால மனைவி நந்தினி. முன்னதாக ஆதித்யா நந்தினியுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டபோது, விரைவில் அகிலாண்டேஸ்வரி நந்தினி, நாகபுரி வம்சத்தைச் சேர்ந்தவள் என கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்தினார். ஆகவே, அகிலாண்டேஸ்வரியையும் மற்றும் அவரது குடும்பத்தினரையும் அழிக்க வனஜா உடன் கை கோர்த்து, நந்தினி அகிலாண்டேஸ்வரி மீது பழிவாங்க முயல்கிறாள். இந்த வஞ்சக பெண்களுக்கு எதிராக ஆதித்யாவும் பார்வதியும் அகிலாண்டேஸ்வரியின் ஆசீர்வாதங்களை பெறுவார்களா என்பதுதான் மீதிக் கதை. இப்போது ஒரு டுவிஸ்ட்டாக, பழைய கால படத்துல வர்றமாதிரி, பார்வதி அகிலாண்டேசுவரியோட அண்ணன் மகள், சின்ன வயசுல என்டு ஆத்தல் எடுக்கும் திட்டத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் வருகிறார். ஆனால் அதை இன்னும் முழுசாக சொல்லாமல் டைரக்டரு ரகசியம் காக்கிறார். நடிகர்கள்முக்கியக் கதாபாத்திரம்
துணைக் கதாபாத்திரம்
முந்தையக் கதாபாத்திரம்
சிறப்புத் தோற்றம்
மறுதயாரிப்புஇது ஒரு தெலுங்கு மொழி தொடரின் தமிழ் மறுதயாரிப்பு எனினும் இவ் தொடர் தமிழிருந்து மலையாளம் மற்றும் கன்னடம் மொழிக்கு மறுதயாரிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே தருணம் இந்த தொடரின் பல காட்சிகள் தமிழ் நேயர்களுக்கேட்ப மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia