ச. காமராசு

கலை நன்மணி
தமிழ்ச்செம்மல்
ச. காமராசு
பிறப்பு8 அக்டோபர் 1966 (1966-10-08) (அகவை 58)
முத்தாலங்குறிச்சி, பழைய
திருநெல்வேலி மாவட்டம்,
மதராசு மாநிலம் (தற்போது தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா
கல்விபன்னிரண்டாம் வகுப்பு (+2)
அறியப்படுவதுஎழுத்தாளர், தொல்லியல் ஆர்வலர்
பெற்றோர்(கள்)பெ. சங்கரசுப்பு (தந்தை),
சொர்ணம்மாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
பொன் சிவகாமி (தி. 1996)
பிள்ளைகள்அபிஷ்விக்னேஷ் (மகன்)
ஆனந்தசொர்ணதுர்கா (மகள்)
உறவினர்கள்தங்கப்பாண்டியன் (சகோதரர்)
ஆறுமுகக்கனி (சகோதரி)
விருதுகள்1. தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது
2. நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி வழங்கிய
தமிழ்ரத்னா சிறப்பு விருது
3. தமிழ்நாடு அரசின் கலை நன்மணி விருது.
வலைத்தளம்
http://www.muthalankurichikamarasu.com/

ச. காமராசு அல்லது முத்தாலங்குறிச்சி காமராசு என அறியப்படும் சங்கரசுப்பு காமராசு, தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், நாடக ஆசிரியர், வரலாற்று ஆர்வலர், பதிப்பாளர், புகைப்படக் கலைஞர், மற்றும் நடிகர் ஆவார்.

தொடக்க வாழ்க்கை

இன்றைய தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்தாலங்குறிச்சி என்ற சிற்றூரில் சொர்ணம்மாள் - சங்கரசுப்பு இணையருக்கு மகனாக 8 அக்டோபர் 1966 அன்று பிறந்தார் காமராசு. இவருக்கு தஙப்பாண்டியன் எனும் சகோதரரும் ஆறுமுகக்கனி எனும் சகோதரியும் உண்டு.

முத்தாலங்குறிச்சி மற்றும் பாளையங்கோட்டையில் தொடக்கக் கல்வியை முடித்தபின் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். குடும்பச் சூழல் காரணமாக மகாராட்டிரத் தலைநகர் பம்பாயில் (தற்போது மும்பை) பணியாற்றினார். சில ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு திரும்பி தினத்தந்தி நாளிதழின் மதுரை கிளையில் பிழை திருத்துநராகப் பணியாற்றினார். பின் செங்கல் சூளைப் பணியாளர், பேருந்து நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.

சாத்தான்குளம் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த எஸ். எஸ். மணி நாடாரிடம் உதவியாளராக சில காலம் பணியாற்றினார்..

பணி

தன் வாழ்க்கை அனுபவங்களையும் தான் கண்டதையும் கேட்டதையும் துணுக்குகளாக, கதை, கட்டுரைகளாக எழுத ஆரம்பித்தார். முதல் படைப்பு, 6 மார்ச் 1987 அன்று தேவி வார இதழில் வெளியானது. அது முதல் தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், துணுக்குகள், சிறுகதைகளை எழுதி வந்தார். மும்பையிலிருந்து வெளியாகும் 'மராத்திய முரசு, 'போல்டு இந்தியா’ போன்ற இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகின.

முத்தாலங்குறிச்சியில் 'தேன்கூடு இளைஞர் மன்றம்’ சார்பாக நடந்த இரண்டு நாடகங்களில் கதாநாயகியாகப் பெண் வேடமிட்டு நடித்தார் . தொடர்ந்து கதாநாயகனாகவும் நடித்து வந்தார். நாடகங்களுக்குக் கதை வசனமும் எழுதினார். திருநெல்வேலி வானொலி நிலையத்தில் 3 அக்டோபர் , 1988 அன்று இவர் எழுத்தில் குருவை மிஞ்சிய சீடர் என்னும் உரைச் சித்திரம் ஒலிபரப்பானது. அதன்பின் கண்டிஷன் கண்டிஷன் என்னும் நாடகமும் ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து இவரது நாடகங்கள் பல வானொலியில் ஒலிபரப்பாகத் தொடங்கின. நாளடைவில் நெல்லை வானொலியின் முக்கிய நாடக எழுத்தாளர்களுள் ஒருவரானார்.இதுவரை நெல்லை வானொலிக்காக இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.

கோயில் தல புராணங்களை நாளிதழ்களில் எழுத ஆரம்பித்த இவர் தற்போது கோயில்கள் தொடர்பான நூல்களையும் எழுதி வருகிறார்.

வரலாற்றுச் செய்திகளைத் திரட்டி நூலாக்கும் கட்டுரையாளராக தொடர்ந்து இவர் இயங்கி வருகிறார். ஆதிச்சநல்லூர்,[1] கொற்கை, தாமிரபரணி, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற வரலாற்றுச் சிறப்புள்ள பகுதிகளுக்கு களப்பணியாளராகச் சென்று ஆய்வுகள் நடத்தி இதுவரை 51 நூல்களை எழுதியுள்ளார். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியின் அறிக்கையை சமர்ப்பிக்காமல் காலங்கடத்திவந்த மத்திய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்து[2] வெற்றி கண்டார்.[3] ஆதிச்சநல்லூர் தல அருங்காட்சியகம் அமைக்கவும் மேலும் சில பகுதிகளில் அகழ்வாராய்ச்சியைத் தொடரவும் இவரது வழக்கு உதவியது.

நூற்பட்டியல் (பகுதியளவு)

  1. நெல்லை தமிழ் முரசு இதழில் இவர் 5 ஆண்டுகளாக எழுதிய நதிக்கரையோரத்து அற்புதங்கள் என்ற தொடர் தலைத்தாமிரபரணி என்ற 1000 பக்கங்கள் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது.
  2. சக்தி விகடன் இதழில் காமராசு எழுதிய தாமிரபரணி கரையினிலே என்ற தொடரும் நூலாக வெளிவந்துள்ளது. ஆனந்த விகடன் இந்நூலை வெளியிட்டுள்ளது.
  3. அத்ரி மலை யாத்திரை என்ற தொடரை காமராசு தினகரன் நாளிதழில் தொடர்ந்து எழுதிவந்தார்.சூரியன் பதிப்பகம் இத்தொடரை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளது.[4]
  4. இருபது தென்னாட்டு சமீன்தாரர்களின் வரலாற்றைத் தொகுத்து ஒரு நூலாக இவர் வெளியிட்டுள்ளார். இவற்றைத் தவிர தினகரன், தினத்தந்தி நாளிதழ்களில் இவர் எழுதிய தொடர்களும் பல நூல்களாக வெளிவந்துள்ளன.
  5. ஆதிச்சநல்லூர் பற்றிய வல்லுநர்கள் கருத்துகளையும் ஆதிச்சநல்லூர் மாதிரி அறிக்கையையும் தொகுத்து ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017 என்ற நூல் தி தமிழ் திசை இந்து நாளிதழ் நூலாக வெளியிட்டுள்ளது.
  6. குணவதியம்மன் என்ற இவரது வரலாற்று நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
  7. வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமி பீடம்[5]
  8. பொருநை பூக்கள்[6]
  9. பொதிகை மலை அற்புதங்கள்
  10. என் உயிரே விட்டுக்கொடு
  11. தாமிரபரணி கரை சித்தர்கள்[7]
  12. ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்
  13. தென்னக கோயில்கள்
  14. தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் [8]
  15. களரி அடிமுறை பாகம் 1 [9]

திரைப்பணி

மேடை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பொருநை சுடர் என்ற ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

ஆண்டு திரைப்படம் பாத்திரம் இயக்குநர்
2014 அப்பாவின் மீசை ரோகிணி
2015 எட்டுத் திக்கும் மதயானை அ. செ. இப்ராகிம் இராவுத்தர்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பேருந்து நடத்துனர் கே. எஸ். தங்கசாமி

பிற பணிகள்

முத்தாலங்குறிச்சியை அடுத்த செய்துங்கநல்லூரில் தன் தாயின் பெயரில் பொன்சொர்ணா ஸ்டுடியோ என்ற புகைப்பட நிறுவனத்தையும் பொன்சொர்ணா பதிப்பகம் என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார்.

புகழ்

இவரது படைப்புகளைப் பற்றி ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகள் மேர்கொள்ளப்பட்டுள்ளன.

எழுத்தாளர் சு. சண்முகசுந்தரம், இவரை "தென்னாட்டுக்குக் கிடைத்த வரம்" என்றார்.

விருதுகள்

ஆண்டு விருது வழங்கியோர்
2019 தமிழ்ரத்னா சிறப்பு விருது [10][11] நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி
2021 தமிழ்ச்செம்மல் விருது[12] தமிழ் வளர்ச்சித் துறை,

தமிழ்நாடு அரசு

கலை நன்மணி விருது[13] கலை பண்பாட்டுத்துறை,

தமிழ்நாடு அரசு

2023 சிறந்த எழுத்தாளருக்கான விருது[14] கலைஞர் தொலைக்காட்சி

தனி வாழ்க்கை

1996-இல் பொன் சிவகாமி என்பவரைத் திருமணம் செய்தார். இவ்விணையருக்கு அபிஷ் விக்னேஷ் என்ற மகனும் ஆனந்த சொர்ண துர்கா எனும் மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "Artefacts recovered at Sivakalai, Adichanallur displayed". The Hindu (in Indian English). 2020-09-12. Retrieved 2021-07-03.
  2. Balaji. "மக்கள் கூடும் இடங்களில் தொல்லியல் பழமை வாய்ந்த இடங்கள் குறித்து போர்டுகள் வைக்க நீதிமன்றம் உத்தரவு". tamil.thesubeditor.com. Retrieved 2021-07-03.
  3. "உலக நாகரிகத்தின் தொட்டில் ஆதிச்சநல்லூர்: முத்தாலங்குறிச்சி காமராசு". ETV Bharat News (in ஆங்கிலம்). Retrieved 2021-07-03.
  4. "கண்டோம் கருப்பசாமியை!". www.dinakaran.com. Archived from the original on 2021-07-11. Retrieved 2021-07-03.
  5. 100010509524078 (2020-02-28). "வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமி பீடம்". Maalaimalar (in English). Archived from the original on 2021-07-09. Retrieved 2021-07-03. {{cite web}}: |last= has numeric name (help); Cite has empty unknown parameter: |8= (help)CS1 maint: unrecognized language (link)
  6. "காவ்யா பொருநை பூக்கள் /முத்தாலங்குறிச்சி காமராசு. Kāvyā porunai pūkkaḷ /Muttālaṅkur̲icci Kāmarācu. – National Library". www.nlb.gov.sg. Retrieved 2021-07-03.
  7. காமராசு, முத்தாலங்குறிச்சி. "திருவருள் திருவுலா: தாமிரபரணி கரைச் சித்தர்கள்!". www.vikatan.com/. Retrieved 2021-07-03.
  8. அறியப்படாத தியாகிகள் நூல் வெளியீட்டு விழா
  9. களரி அடிமுறை பாகம் 1 வெளியீட்டு விழா. முனைவர் ரமேஷ் ரத்தினகுமார் வாழ்த்துரை
  10. நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி செய்தி
  11. "எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு 'தமிழ் ரத்னா' விருது எடப்பாடி பழனிசாமி வழங்கினார்". Dailythanthi.com. 2019-10-23. Retrieved 2021-07-03.
  12. "Praise pours in for Tamil Semmal award winner". The New Indian Express. Retrieved 2021-07-03.
  13. கலை விருதுகளுக்கு 15 பேர் தேர்வு
  14. கலைஞர் தொலைக்காட்சி செய்தி
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya