ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்
ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் (Jigarthanda DoubleX) (ஜிகர்தண்டா 2) என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் மற்றும் இன்வெனியோ ஆரிஜின் ஆகியவற்றின் கீழ் கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன் மற்றும் அலங்கார பாண்டியன் ஆகியோர் இத்திரைப்படத்தினைத் தயாரித்துள்ளனர். ஜிகர்தண்டா (2014) படத்தின் தொடர்ச்சியான இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் 2022 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை திரு செய்திருக்கின்றார் மற்றும் ஷபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்துள்ளார். ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10 தேதி தீபாவளிப் பன்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. கதை1975 இல், தமிழ் சினிமாவின் முதல் கருமை நிற நடிகராக ஆசைப்படும் பாண்டியன் மதுரையில் ஒரு பிரபலமான ரௌடி ஆவார். பாண்டியா என்ற தலைப்பில் சத்யஜித் ரேயின் முன்னாள் உதவி இயக்குனரான ரே தாசனை, கிளின்ட் ஈஸ்ட்வுட் பாணியிலான மேற்கத்திய திரைப்படத்தை தமிழ்நாட்டில் இயக்கச் செய்கின்றார். படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது, பாண்டியனின் எதிரிகள் அவரைப் பல்வேறு வகையில் தாக்கத்தொடங்குகின்றார்கள் தொடங்குகிறார்கள், இதனால் படப்பிடிப்புக்குப் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.[1] நடிகர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia