டிங்கிரி பண்டா விஜயதுங்கா
டிங்கிரி பண்டா விஜயதுங்கா (பெப்ரவரி 15, 1922 - செப்டம்பர் 21, 2008) இலங்கையின் 4 வது சனாதிபதியும் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். சனாதிபதியாவதற்கு முன்னர் ரணசிங்க பிரேமதாசா அரசில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்டவர்.[1][2][3] விஜேதுங்க முதியன்சேலாவின் தெல்கஹாபிட்டிய ஆராச்சில்லா மற்றும் அவரது மனைவி மணம்பேரி முதியன்சேலா பலிகுமனிகே மனம்பேரி ஆகியோருக்கு 1916 பெப்ரவரி மாதம் 15 திகதி மூத்த பிள்ளையாக டிங்கிகிரி பண்டா விஜேதுங்க பிறந்தார்கள்.[4] உடுநுவர, பொல்கஹ அங்க கிராமத்தில் பிறந்த அவர், கம்பளை புனித ஆண்ட்ரூ கல்லூரியில் தனது கல்வியை முடித்து கூட்டுறவு பரிசோதகராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். மலையகத்தின் கௌரவ அமைச்சரான திரு. ஏ. ரத்நாயக்கவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்று D. B. திரு.விஜேதுங்க அவர்கள் அரசியல் அரங்கில் பிரவேசித்தார். நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியாக சுமார் ஒரு வருட காலம் D. B. திரு.விஜேதுங்க மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். உண்மையான மக்கள் தலைவராக மக்களின் இதயங்களில் நிலைத்திருந்த திரு.விஜேதுங்க ஜனநாயகப் பண்புகள் நிறைந்தவர். 1994 ஆம் ஆண்டில் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு பெற்று பிலிமதலாவையில் உள்ள தனது இல்லத்தில் தனது கடைசி காலத்தை கழித்தார், டி.பி விஜேதுங்க – நிறைவேற்று அதிகாரமிக்க இலங்கையின் 3வது ஜனாதிபதி
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia