தமிழ்க் கல்வெட்டுகள் எனப்படுபவை தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஆகும். கல்வெட்டுக்கள் பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்று அவற்றில் குறிக்கப்பெற்ற செய்திகளையும், அவை எழுதப்பட்ட கால மொழி, எழுதியவர்கள், எழுதுவித்தவர்கள், அவர்களின் சமூகம் முதலிய செய்திகளைச் சொல்லுகின்றன. இவை அம் மொழி, சமூகம் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிய முக முக்கியமான ஆவணங்களாக திகழுகின்றன. உலகிலேயே இலத்தீனுக்கு அடுத்து [1]இந்தியத் தொல்லியல் ஆய்வு மையம் (2005 அறிக்கை) கண்டறிந்த சுமார் 100,000 கல்வெட்டுகளில், சுமார் 60,000 தமிழ்நாட்டில் உள்ளன.[2]
கீழடி அகழ்வாய்வு மையத்தில்தமிழ் கல்வெட்டுகளுடன் பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் கலைப்பொருட்கள், மட்பாண்டங்களில் தமிழ் பெயர்களான ஆதன், உத்திரன், குவிரன்-ஆதான், திசன் போன்றவை காணப்படுகின்றன. [6][7]
கிமு 6 ஆம் நூற்றாண்டு
ஆனைக்கோட்டை முத்திரை ( சோப்புக்கல் முத்திரை ), இலங்கையின் ஆனைக்கோடையில் கிடைத்தது. இதில் தமிழ் கல்லெழுத்துகளுடன் பெருங்கற்கால குறியீடுகளும் கலந்துள்ளன. இதன் காலம் கிமு 1000 - கி.மு. 300 கி.மு.[8][9]
பொ.ச.மு. 500 க்கு முந்தைய தமிழ் எழுத்துகள் கொண்ட ஓடுகள் பொருந்தல் தளத்தில் கண்டெடுக்கப்பட்டன. இது தமிழ்நாட்டின், பழனிக்கு தென்மேற்கே 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
பொ.ச.மு. 500 க்கு முந்தைய தமிழ் எழுத்துகள் தமிழ்நாட்டின்ஈரோடு அருகே சென்னிமலை கொடுமணலில் கண்டறியப்பட்டது.
கிமு 5 - 3 ஆம் நூற்றாண்டய தமிழ் எழுத்துகளைக் கொண்ட ஒரு சுடுமண் எடை பிடிப்பானது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் புறநகரில் உள்ள பெரிய தடகத்தில் உள்ள ஒரு பெருங்கற்கால தளத்தில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் அகழ்ந்தெடுக்கபட்டது. [15][16]
கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள தமிழ் எழுத்து, நான்கு செ.மீ நீளமுள்ள ‘தங்கி’யில் காணப்பட்டது. இதை ‘தவன் சாத்தான்’ என படிக்கபட்டது. அதாவது அதாவது தவமிருக்கும் துறவி என்பதாகும்.
கிமு 4 ஆம் நூற்றாண்டு
பொ.ச.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பண்டைய மட்பாண்டங்கள் பூம்புகாருக்குக் கிழக்கே கடல் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கரையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது காவேரிபட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது, இது தமிழ்நாட்டின், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். முற்கால சோழப் பேரரசின் செழிப்பான பண்டைய தலைநகராகவும், துறைமுக நகரமாக காவிரிபட்டிம் இருந்தது. [17]
மலையில் ஐந்து குகைகள் உள்ளன, அதில் நான்கு குகைகளில் ஆறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. [21]சங்க காலத்தில் பொறிக்கப்பட்ட இவை, தமிழ்நாட்டின் முக்கியமான கல்வெட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. [22]சங்க காலத்திய பாண்டிய மன்னான முதலாம் நெடுஞ்செழியனால் (கி.மு. 270) சமண துறவிகளுக்கு கல் படுக்கைகளை உருவாக்கப்பட்டதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கல் படுக்கைகளை உருவாக்கிய தொழிலாளிகளின் பெயரையும் விவரிக்கிறது. உதாரணமாக, நெடுஞ்செழியனின் பணியாளரான கடலன் வழுதி என்பவன் சமணத் துறவி நந்த சிரிகுவனுக்கு கல் படுக்கை அமைத்ததாக ஒரு கல்வெட்டு காட்டுகிறது. [23] இது இந்தியத் தொல்லியல் துறையால் தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கபட்டுள்ளது. [24]
பொ.ச.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் கல்வெட்டு, ஆரம்பகால சமணத் துறவிகள் வாழ்ந்த ஒரு குகையில் பொறிக்கப்பட்டுள்ளது, இது தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், அரிட்டப்பட்டி கிராமத்தில் உள்ளது. [28][29]
பொ.ச.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் எழுத்துகள், தமிழ்நாட்டின்மதுரைக்கு அருகில் உள்ள தேனூரில். தங்கத் தகட்டில் எழுதப்பட்டுள்ளது [30]
அதில் 'ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி' [36] என்று பொறிக்கபட்ட கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக் கல்வெட்டின் பொருளானது "சத்யபுதோ (பட்டம்) அதியன் நெடுமான் அஞ்சி (பெயர்), கொடுத்த (ஈத்த) உறைவிடம் (பாழி)" என்பதாகும். இந்த கல்வெட்டு ஒரு வரியில் குறுகியதாக இருந்தாலும், இது தென்னிந்திய வரலாற்றின் பல்வேறு அம்சங்களில் சிறப்பான ஒளியை பாய்ச்சுகிறது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் அசோகரின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்சியாளர்களின் வம்சமான சத்யபுத்திரர்களின் யார் என்பது குறித்த சந்தேகத்தை இந்த கல்வெட்டு நீக்குகிறது [37]
கிமு முதல் நூற்றாண்டய, தமிழி எழுத்துக்கள் பொறிக்கபட்ட உடைந்த சேமிப்பு குடுவையானது எகிப்தின், குசீர்-அல்-காதிம், (லுகோஸ் லைமன்) கண்டறியப்பட்டது. கிமு முதல் நூற்றாண்டு காலத்திய இரண்டு தமிழி எழுத்துப் பொறிப்புகளை, இதே தளத்தில் கண்டறியப்பட்டன. [38]
மத்திய தரைக்கடல் பிராந்தியத்தின் நூற்றுக்கணக்கான ஓடுகள், செய்கலன் சில்லுகள், இத்தாலி, கிரிஸ் மட்கல ஜாடித் துண்டுகள் மற்றும் பொ.ச.மு. முதலாம் நூற்றாண்டு, தமிழ் எழுத்துகளுடன் உள்ள சிவப்பு மண் பொருட்கள் ஆகியவை தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் கண்டறியப்பட்டன. [45]
↑Marine archaeological explorations of Tranquebar-Poompuhar region on Tamil Nadu coast, Rao, S.R.. Journal of Marine Archaeology, Vol. II, July 1991. Available online at