தரணிக்கோட்டை
தரணிகோட்டை (Dharanikota) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இது குண்டூர் வருவாய் பிரிவின் அமராவதி மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் ஆந்திர மாநில தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். இது ஆந்திர மாநில தலைநகர் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் அதிகார வரம்பில் உள்ளது.[4] வரலாறு![]() கிமு 500இல், தரணிகோட்டை 'தன்யகடகம்' என்று அழைக்கப்பட்டுள்ளது. ஞானம் பெற்ற 16ஆம் ஆண்டில் புத்தர் தன்யகடகம் சென்று தனது பத்து தரணிகளைப் பிரசங்கித்தார். எனவே, இது தரணிகோட்டை என்று அழைக்கப்படுகிறது. தரணிகோட்டையின் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் தரணிகோட்டையிலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் விகாரைகள் இருப்பது தெரியவந்தது.[5] பொ.ச. 1 முதல் 3ஆம் நூற்றாண்டுகளில் தக்காணத்தில் ஆட்சி செய்த சாதவாகனர் வம்சத்தின் தலைநகராக இருந்த பண்டைய தான்யகடகத்தின் தளம் இது. இது கோட்டா வம்சத்தின் தலைநகராகவும் இருந்தது. இந்த வம்சம் இடைக்காலத்தில் 12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சி செய்தது. கிருஷ்ணா ஆற்றின் பள்ளத்தாக்கில் ஒரு முக்கியமான அரிசி உற்பத்தி செய்யும் பகுதியாகும். இது இந்தியாவின் பிற பகுதிகளுடனும் வெளிநாடுகளுடனும் ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்தது. இந்த இடம் பெரிய தாது கோபுரத்திற்கும் பிரபலமானது; 2006 சனவரியில் மிகப் பெரிய காலச்சக்ரா விழா அங்கு நடத்தப்பட்டது.[6][7] குண்டூர் மாவட்டத்தின் அமராவதி கிராமத்திற்கு சுவான்சாங் வருகை புரிந்த போது, அந்த இடத்தைப் பற்றியும் அப்போது இருந்த விகாரைகள் குறித்தும் ஒரு புகழ்பெற்ற கணக்கை எழுதினார். கம்மவர் பரம்பரையைச் சேர்ந்த ஒரு ஜமீன்தாரான வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு என்பவரின் கீழ் தரணிகோட்டை அதன் மகிமையை கொண்டிருந்த்தது. நிலவியல்தாரனிகோட்டை மண்டல் தலைமையகமான அமராவதிக்கு மேற்கே அமைந்துள்ளது.[8] 16.579444 ° N 80.311111 ° கிழக்கில் இது ஒரு பரப்பளவில் பரவியுள்ளது . புள்ளி விவரங்கள்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தரணிகோட்டையில் 7,534 பேர் என மக்கள் தொகை இருந்தனர். மொத்த மக்கள் தொகையில், 3,734 ஆண்களும் 3,800 பெண்களும் இருந்தனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1018 பெண்கள். 725 குழந்தைகள் 0–6 வயதுக்குட்பட்டவர்கள், அவர்களில் 368 சிறுவர்கள் மற்றும் 357 பெண்கள் - ஒரு விகிதம் 1000 க்கு 970 ஆகும். சராசரி கல்வியறிவு விகிதம் 66.06 சதவீதமாக உள்ளது. 4,498 கல்வியாளர்கள், இது மாநில சராசரியான 67.41 சதவீதத்தை விட சற்றே குறைவு.[9] அரசாங்கமும் அரசியலும்தரணிகோட்டை கிராம ஊராட்சி அமைப்பு கொண்டதாகும். இது பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு பகுதி உறுப்பினரால் குறிப்பிடப்படுகிறது. இந்த கிராமத்தை அமராவதி மண்டல் பரிசத் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் இடைநிலை மட்டத்தில் நிர்வகிக்கிறது.[8] மண்டல் பரிசத் தொடக்கப்பள்ளி அல்லது மண்டல் பரிசத் மேல்நிலைப்பள்ளி என்பது இந்தியாவின் பல அரசு தொடக்கப் பள்ளிகளின் பெயர் மற்றும் குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இவ்வாறு குறிக்கப்படுகிறது. இந்த பள்ளிகள் மண்டல் பரிசத் (மாநிலங்களின் வட்ட உள்ளூர் அதிகாரிகள்) நிறுவியுள்ளன. மேலும் அவற்றால் மேற்பார்வையிடப்படுகின்றன. நிதியளிக்கின்றன .மண்டல் பரிசத் தொடக்கப் பள்ளிகள் 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியை வழங்குகின்றன கல்வி2018–19 கல்வியாண்டிற்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 8 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5 மண்டல் பரிசத் தொடக்கப்பள்ளி மற்றும் 3 தனியார் பள்ளிகள் உள்ளன.[10] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia