திரிபுவன விஜயதுங்கதேவி

திரிபுவன விசயதுங்கதேவி
Tribhuwana Wijayatunggadewi
(தியா கீதர்யா)
மயபாகித் பேரரசின் சக்கரவர்த்தினி
பார்வதியாகச் சித்தரிக்கப்பட்டுள்ள திரிபுவனா
ஆட்சிக்காலம்மயபாகித் பேரரசு: 1328 – 1350
முன்னையவர்செயநகரன்
பின்னையவர்ஆயாம் உரூக்
சக்கரதாரன் (கர்த்தவர்த்தன வீர துமாபெல்)
பட்டப் பெயர்
ஸ்ரீ திரிபுவனோத்துங்கதேவி மகராயச ஜெயவிஷ்ணுவர்த்தனி
அரசமரபுராயச வம்சம்
தந்தைராத கர்சவிஜயன் (கர்த்தயச ஜெயவர்த்தனன்)
தாய்தியா காயத்திரி இராஜபத்தினி
மதம்சைவம்

திரிபுவன விசயதுங்கதேவி அல்லது திரிபுவனோத்துங்கதேவி செயவிஷ்ணுவர்த்தனி அல்லது தியா கீதர்யா (ஆங்கிலம்: Tribhuwana Wijayatunggadewi; இந்தோனேசியம்: Sri Tribhuwanotunggadewi; Dyah Gitarja) என்பவர் மயபாகித் பேரரசின் மூன்றாவது சக்கரவர்த்தினியும் சாவக நாட்டு மகாராணியும் ஆவாள். 1328-இல் இருந்து 1350 வரை மஜபாகித்தை ஆண்டதுடன், அந்தப் பேரரசின் விரிவாக்கத்திற்கும் பெரும் பங்காற்றினாள்.

வாழ்க்கை

மஜபாகித்தின் முதல் மன்னனான ராதன் விஜயனுக்கும் காயத்திரி ராஜபத்தினிக்கும் பிறந்த இவர், அப்பேரரசின் நான்காவது சக்கரவர்த்தியான ஆயாம் உரூக்கின் தாயும் ஆவார். காகுரிப்பான் இராச்சியத்தின் சீமாட்டி ("Bhre Kahuripan") என்ற செல்லப் பெயரால் குறிப்பிடப்பட்ட இவர், மயபாகித்தையும் அதற்கு முந்திய சிங்காசாரி அரசையும் ஆண்ட இராசச வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

ஆட்சி

நகரகீர்த்தாகமம் எனும் சாவக நூலொன்றில், 1328இல், செயநகரன் கொல்லப்பட்ட பின், தன் தாய் காயத்திரியின் ஆணைக்கேற்ப, திரிபுவனா 1329இல் ஆட்சிக்கு வந்ததாககச் சொல்லப்படுகின்றது. 1350-இல் தான் இறக்கும் வரை மயபாகித்தை ஆண்டிருக்கிறார் திரிபுவனா.[1]

தன் மைத்துனன் ஆதித்தியவர்மனின் துணையுடன், அவர் போர்க்களத்துக்குப் படை நடத்திச் சென்றதையும், பெடுகு, பெயாங் முதலான அரசுகளை எதிர்த்து, மயபாகித் பேரரசை விரிவாக்கம் செய்ததையும், பாலியைத் தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்ததையும் நகரகீர்த்தாகமம் விவரிக்கின்றது.

அடிக்குறிப்புகள்

  1. Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. ISBN 9780824803681.

உசாத்துணைகள்

முன்னர் மயபாகித் பேரரசு
1328–1350
பின்னர்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya