திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோயில்
திருப்பனந்தாள் தாலவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தல வரலாறுஇவ்வாலயம் பனைமரத்தை தலவிருட்சமாக கொண்டு விளங்குவதால் திருப்பனந்தாள் ஆயிற்று. இன்றும் ஆலய பிரகாரத்தில் இரு ஆண் பனை தெய்வீக தன்மையுடன் உள்ளது. 'தாலம்' என்றால் பனை. பனை வனத்தில் வீற்றிருக்கும் ஈசன் தாலவனேஸ்வரர் ஆனார். ஈஸ்வரன் மேற்கு நோக்கியும் அம்பாள் கிழக்கு நோக்கியும் எழுந்தருளி இருக்கிறார்கள். இவ்வாலயம் திருமணத்தடை குழந்தை இன்மைக்கு பரிகார தலமாக விளங்குகிறது. தாடகை என்னும் மங்கை குழந்தை வரம் வேண்டி நாள்தோறும் மாலை தொடுத்து ஈசனுக்கு அணிவித்தாள். ஒரு நாள் மாலையை அணிவிக்க சிரமம் எற்பட்டபோது இறைவனே குனிந்து மாலையை ஏற்றார். அன்று முதல் தலைசாய்ந்த நிலையிலேயே இருந்தது. அப்போதைய மன்னன் மணிமுடிச்சோழன் (நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியின் தந்தை) யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்தும் பலன் தரவில்லை. திருக்கடையூர் குங்கிலியக்கலய நாயனார் இவ்வாலயம் வந்தபோது ஈசனின் தலையை நிமிர்த்த எண்ணி ஒரு கயிற்றைத் தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசன் கழுத்தில் கட்டி, 'ஒன்று உன் தலை நிமிர வேண்டும். இல்லையேல் நான் இங்கேயே உயிர் விடல் வேண்டும்' என இழுத்தார். மிக எளிதாக தலை நிமிர்ந்தது என்று திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. தாடாகைக்காக தலை சாய்ந்ததும், குங்கிலியக்கலய நாயனாருக்காக தலை நிமிர்ந்ததும் இவ்வாலயத்தில் சிற்ப வடிவில் உள்ளது. ஸ்ரீகுமரகுருசாமிகள் நிறுவிய காசிமடம் இங்குதான் உள்ளது. பிரம்மன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், சூரியன், சந்திரன், ஆதிஷேசன், நாககன்னிகை போன்றோர் வழிபட்ட தலம். அமைவிடம்இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 39வது தலம் ஆகும். சிறப்புகள்தாடகை என்னும் பெண் புத்திரப் பேறு வேண்டி மாலை சாத்தும்போது ஆடை நெகிழ, இறைவன் தனது திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார் என்பதுவும், பின்னர் குங்கிலியக் கலய நாயனார் அந்நிலையை மாற்றினார் என்பதுவும் தொன்நம்பிக்கை (ஐதீகம்). இவற்றையும் பார்க்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia