தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (South Asian Games) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தெற்காசிய நாடுகளிடையே நடைபெறும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இப்போட்டிகளை தெற்காசிய விளையாட்டுப் பேரவை (SASC) என்ற அமைப்பு நடத்துகிறது. இவ்வமைப்பு 1983 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. தற்போது இவ்வமைப்பில் ஆப்கானித்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலைத்தீவுகள், நேபாளம், பாக்கித்தான், இலங்கை ஆகிய எட்டு நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.
முதலாவது தெற்காசியப் போட்டிகள் 1984 ஆம் ஆண்டில் நேபாளத்தின், காட்மாண்டு நகரில் இடம்பெற்றன. தெற்காசியக் கூட்டாட்சி விளையாட்டுகள் என அழைக்கப்பட்டுவந்த இப்போட்டிகள் 2004 ஆம் ஆண்டில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.[1] இவ்விளையாட்டுப் போட்டிகள் பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளின் தெற்காசிய வகை எனக் கூறப்படுவதுண்டு. 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவின் குவகாத்தி, சில்லாங் ஆகிய நகரங்களில் 2016 பெப்ரவரி 5 முதல் பெப்ரவரி 16 வரை நடைபெற்றது. 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 1 டிசம்பர் முதல் 10 டிசம்பர் 2019 முடிய நேபாள நாட்டின் காட்மாண்டு மற்றும் பொக்காரா நகரங்களில் நடைபெற்றது.
போட்டிகள்
தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்
தெற்காசியக் குளிர்காலப் போட்டிகள்
தங்கப் பதக்கப் பட்டியல்
பதக்கப் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்