தேசிய தொழினுட்பக் கழகங்கள்![]() தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (தே. தொ. க / N I Ts ), இந்தியாவின் முதன்மையான பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வழங்கும் கல்லூரிகளாகும். அவை துவக்கத்தில் மண்டல பொறியியல் கல்லூரிகள் (RECs) என அழைக்கப்பட்டன. 2002ஆம் ஆண்டு, மனிதவள மேம்பாடு அமைச்சகம், இந்திய அரசு, துவக்கத்தில் இருந்த 17 மண்டல பொறியியல் கல்லூரிகளையும், படிப்படியாக, தேசிய தொழில்நுட்பக் கழகங்களாக மேம்படுத்த முடிவெடுத்தது. தற்போது அகர்த்தலாவில் அண்மையில் திறக்கப்பட்டதையும் சேர்த்து 20 தே. தொ.கழகங்கள் உள்ளன. இந்திய அரசு தேசிய தொழில்நுட்பக் கழகங்கள்(NIT) சட்டம் 2007 கீழ் இந்த 20 கல்லூரிகளையும் கொணர்ந்து அவை தன்னிச்சையாக இயங்க வழி வகுத்துள்ளது. இக்கல்லூரிகள் மண்டல மேம்பாட்டிற்காக ஒவ்வொரு பெரும் இந்திய மாநிலத்திலும் ஓர் தே.தொ.க அமையவேண்டும் என்ற அரசின் விதிகளுக்குட்பட்டு இந்தியாவெங்கும் விரவிக் கிடக்கின்றன. தே.தொ.க சட்டத்தின்படி, ஒவ்வொரு தே.தொ.கவும் தன்னிச்சையான தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக செயல்பட்டு தமது கல்வித்திட்டங்களையும் செயற்பாட்டுக் கொள்கைகளையும் தாமே வகுத்துக்கொள்கின்றன. வரலாறுபண்டிட் ஜவஹர்லால் நேருவின் கனவான அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் சிறந்த இந்தியாவை உருவாக்குவதை நிறைவேற்றவும் பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர்களை வளர்த்தெடுக்கவும் இந்திய அரசினால் பதினான்கு மண்டல பொறியியல் கல்லூரிகள் 1959க்கும் 1965க்கும் இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்டன. அவை போபால், அலகாபாத், கோழிக்கோடு, துர்காபூர், குருச்சேத்திரா, ஜம்செட்பூர், ஜெய்ப்பூர், நாக்பூர், ரூர்க்கேலா, ஸ்ரீநகர், சூரத்கல், சூரத், திருச்சிராப்பள்ளி, மற்றும் வாரங்கல் என்ற இடங்களில் அமைக்கப்பட்டன. மேலும் மூன்று கல்லூரிகள் 1970 மற்றும் 1990களுக்கிடையே சில்சார், அமீர்பூர், மற்றும் ஜலந்தர் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டன. ஒவ்வொன்றுமே மைய அரசு மற்றும் மாநில அரசின் கூட்டு நிறுவனமாகும். அண்மையில் மனிதவள மேம்பாடு அமைச்சகம் மேலும் மூன்று கல்லூரிகளுக்கு, பாட்னா (பிகார் பொறியியல் கல்லூரி - 110 ஆண்டு வரலாறுள்ள கல்லூரி), ராய்பூர் (அரசு பொறியியல் கல்லூரி),[1] மற்றும் அகர்தாலா (திரிபுரா பொறியியல் கல்லூரி)[1], தேசிய தொழில்நுட்பம் கல்லூரி தகுதி வழங்கியுள்ளது. மாநிலங்களின் தேவைக்கேற்பவும் செயல்படுத்தக் கூடியதாயினும் வருங்கால தே.தொ.கழகங்கள் முற்றிலும் புதியதாகவோ அல்லது ஏற்கனவே உள்ள அரசு பொறியியல் கல்லூரியினை மேம்படுத்தியோ அமைக்கப்படும். இவ்வகையில் முற்றிலும் புதியதாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் இம்ஃபால் நகரில் 21வது தே.தொ.க ரூ.500 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. அண்மைய மாற்றங்கள்2002 முதல், இந்திய அரசின் மனிதவள மேம்பாடு அமைச்சகம் படிப்படியாக அனைத்து (17) மண்டல பொறியியல் கல்லூரிகளும் தேசிய தொழில்நுட்பக் கழகங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மண்டல பொறியியல் கல்லூரிகளின் பங்களிப்பையும் அவற்றின் முன்னாள் மாணவர்களின் சாதனைகளையும் கருத்தில் கொண்டு அவற்றின் திறனை இந்திய தொழில்நுட்பக் கழகங்களைப் போன்று வளர்த்தெடுக்க இந்த மேம்பாடு செய்யப்பட்டது. இந்த மேம்பாட்டின் வாயிலாக அவற்றிற்கு வருடாந்திர நிதி கூடுதலாக்கப்பட்டும், கூடுதல் வேலை தன்னாட்சியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவை நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக தகுதி வழங்கப்பட்டு தாமே பட்டங்கள் வழங்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இவை இக்கல்லூரிகளில் கல்வித்தரத்தை வெகுவாக மேம்படுத்தி யுள்ளன. இந்த மாற்றங்கள் மைய அரசு ஏற்படுத்திய உயர்மட்ட மீளாய்வுக் குழு(HPRC)[2] வின் பரிந்துரைகளின்படி செய்யப்பட்டன. முனைவர். ஆர்.ஏ. மாஷேல்கர்தலைமையில் அமைந்த இக்குழு "வருங்கால ம.பொ.கல்லூரிகளின் கல்விச்சிறப்பிற்கான திட்ட முன்வரைவு (Strategic Road Map for Academic Excellence of Future RECs)" என்ற அறிக்கையை 1998ஆம் ஆண்டு அரசிடம் அளித்தது. 2008ஆம் ஆண்டிலிருந்து தே.தொ.கவின் சராசரி ஆண்டு நிதி ரூ.50 கோடியாக கூடுதலாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தே.தொ.கவும் உலக வங்கியிடமிருந்து ரூ.20 -25 கோடிகள் தொழில்நுட்பக் கல்வி தரமேம்பாட்டுத் திட்டத்தின் (TEQIP) கீழ் பெறுகிறது. இந்த திட்டம் நாட்டின் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த மனிதவள மேம்பாடு அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது. தே.தொ.கழகங்களில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு 800,000 பேர் பங்கேற்கும் அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு (AIEEE ) தேர்வு மூலம் நிகழ்கிறது. இந்த மேம்பாட்டிற்குப் பிறகு, மாணவர் தரம், மேலாண்மை அமைப்பு, கல்வித்திட்ட ஆராய்வு மற்றும் மாணவர் வேலைவாய்ப்பு என்ற வகைகளில் பெரும் முன்னேற்றத்தை இக்கல்லூரிகள் எட்டியுள்ளன. தேசிய தொழில்நுட்ப கழகங்களின் பட்டியல்
வருங்காலம்நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் சட்டம், 2007 நிறைவேற்றப்பட்டுள்ளது[3]. இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்கள் 2007-2008 கல்வியாண்டிலிருந்து நடப்புக்கு வருகின்றன. 15 ஆகஸ்ட் 2007 முதல் நடப்புக்கு வரும் இச்சட்டம் ஒவ்வொரு தே.தொ.கழகத்தையும் நாட்டின் முதன்மையான கல்விக்கழகமாக அறிவிக்கிறது. இவை உலக அளவில் சிறந்த தொழில்நுட்பக் கல்விக்கான கல்விக்கூடமாக விளங்க வெகு தொலைவு செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும், இந்தியாவிலுள்ள பெரும்பாலான கல்லூரிகளுக்கும் இதே நிலை நிலவுகிறது. வருங்கால தே.தொ.க மாணவர்கள் இவற்றின் மதிப்பை பலமடங்கு உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கலாம். இத்தகைய உலகளாவிய சிறப்புநிலை எய்த செய்ய வேண்டுவன: மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia