தோமசு சவுந்தரநாயகம்
அருட்திரு இம்மானுவேல் தோமசு சவுந்தரநாயகம் (Emmanuel Thomas Savundaranayagam, பிறப்பு: 13 சூலை 1938) இலங்கைத் தமிழ் போதகரும், முன்னாள் ரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.[1] ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்சவுந்தரநாயகம் 1938 சூலை 13 இல் இலங்கை, ஊர்காவற்துறையில் பிறந்தார்[2][3] ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[4][5] பின்னர் அவர் யாழ்ப்பாணம் புனித மார்ட்டின் மடப்பள்ளியிலும், அம்பிட்டி தேசிய மடப்பள்ளியிலும் (1957-64) கல்வி கற்றார்.[3] ரோம் நகரில் பரப்புரைக் கல்லூரியில் புனித இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றார்[3] பணிசவுந்தரநாயகம் 1963 டிசம்பரில் போதகராக நிலைப்படுத்தப்பட்டார்.[2][3] 1981 சனவரியில் மன்னார் மறைமாவட்டத்தில் பணியில் அமர்ந்தார். 1981 சூலையில் மடு மரியாள் ஆலயத்தில் மன்னார் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.[2][3] 1992 சூலையில் யாழ்ப்பாண ஆயராக நியமிக்கப்பட்டார்.[2][3] 2015 அக்டோபரில் பணியில் இருந்து இளைப்பாறினார்.[6] இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காக சவுந்தரநாயகம் குரல் கொடுத்து வந்துள்ளார்.[7][8] ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வர வெளிநாடுகள் தலையிட வேண்டும் எனக் குரல் கொடுத்தார்.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia