த. மு. சபாரத்தினம்
தம்பையா முதலியார் சபாரத்தினம் (Thambaiyah Mudaliyar Sabaratnam, 16 சனவரி 1895 - 23 சனவரி 1966) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினராக 1924 முதல் 1931 வரை வட மாகாணத்தின் கிழக்குப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] வாழ்க்கைச் சுருக்கம்ரி. எம். சபாரத்தினம் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்று, பின்னர் சட்டக் கல்வியை கொழும்பு சட்டக் கல்லூரியில் முடித்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[2] வாலாம்பிகை அழகம்மா என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ராசக்கோன் புலேந்திரா, சகுந்தலா நல்லையா என்ற இரு பிள்ளைகள். அரசியல் வாழ்க்கை1924 தேர்தலில் இலங்கை சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினராக வட மாகாணத்தின் கிழக்குப் பகுதிக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இப்பதவியை அவர் 1931 ஆம் ஆண்டு வரை வகித்து வந்தார். பின்னர் 1947 நாடாளுமன்றத் தேர்தல்[4], மற்றும் 1952 தேர்தல்களில்[5] அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வவுனியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
சமூகப் பணிசபாரத்தினம் இலங்கை இராமகிருஷ்ண மடத்தின் நிருவாக உறுப்பினராகவும்[6] பின்னர் வற்றாப்பளை அம்மன் கோவில் அறங்காவல் தலைவராகவும் சேவையாற்றினார்.[7] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia