நாட்டறம்பள்ளி
நாட்டறம்பள்ளி (ஆங்கிலம்:Nattarampalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின் நாட்டறம்பள்ளி வட்டத்தின் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு இயங்குகிறது. நாட்டறம்பள்ளியில் ஸ்ரீ ராம் சந்திர மிஷன் மற்றும் ஸ்ரீ ராம்கிருஷ்ணா மடம் அமைந்துள்ளது. நாட்டறம்பள்ளி நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அமைவிடம்நாட்டறம்பள்ளி, மாவட்டத் தலைமையிடம் வேலூரிலிருந்து 85 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த இரயில் நிலையம் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஜோலார்பேட்டையில் உள்ளது. இதனருகே உள்ள நகரங்கள் மேற்கே கிருஷ்ணகிரி 35 கி.மீ.; வடக்கே வாணியம்பாடி 18 கி.மீ.; தெற்கே திருப்பத்தூர் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு7.20 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஜோலார்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,480 வீடுகளும், 10,390 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.82% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1007 பெண்கள் வீதம் உள்ளனர்.[4] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia