ஆலங்காயம்
ஆலங்காயம் (ஆங்கிலம்:Alangayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஆலங்காயத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் வைணு பாப்பு வானாய்வகம் உள்ளது. ஆலங்காயத்தைச் சுற்றிலும் சவ்வாது மலைகள் உள்ளது. இதனருகே திருப்பத்தூர், வாணியம்பாடி நகரங்கள் உள்ளது. அமைவிடம்ஆலங்காயம், வட்டத் தலைமையிடமான வாணியம்பாடியிலிருந்து 18 கி.மீ.; மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு8 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3] [4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட இப்பேரூராட்சி 4,183 வீடுகளும், 18,327 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78 % மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1023 பெண்கள் வீதம் உள்ளனர்.[5] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 572 மீட்டர் (1876 அடி) உயரத்தில் இருக்கின்றது. எல்லைகள்ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia