நாவலப்பிட்டி7°3′18″N 80°32′9″E / 7.05500°N 80.53583°E
புவியியலும் காலநிலையும்நகரம் இலங்கையின் மத்திய மலைநாட்டின் தென் மேல் சாய்வில் அமைந்துள்ளது. சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 602 மீற்றர்களாகும். இப்பகுதி மிக சாய்வான மலைகளைக் கொண்டுள்ளது குறைந்த தூரத்தில் பாரிய உயர வேற்றுமகளைக் காணலாம். 930 மீற்றர் உயரமான தொலொஸ்பாகை மலைத்தொடர்கள் நகருக்கு அண்மையில் காணப்படுகின்றன. இலங்கையின் மிக நீளமான நதியான மகாவலி கங்கை இந்நகரின் ஊடாகப் பாய்கிறது. நகரின் வருடாந்த மழைவீழ்ச்சி சுமார் 2500 மி.மீ. ஆகும். இது மே மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையான காலப்பகுதியில் வீசும் தென்மேற்கு பருவக் காற்றினால் கிடைக்கிறது. சராசரி வெப்பநிலை 28 பாகை செல்சியஸ் ஆகும். மிகக் குறைந்த வெப்பநிலையான 15 பாகை செல்சியஸ் ஜனவரி மாதத்தில் உணரப்படும். போக்குவரத்துநாவலப்பிட்டியை பெருந்தெரு மற்றும் தொடருந்து வழியாக அணுகலாம். கண்டி நகரில் இருந்து ஏஏ-1 பெருந்தெருவில் பேராதனை வரை பயணம் செய்து அங்கிருந்து ஏஏ-5 பெருந்தெருவில் கம்பளை வரை சென்று அங்கிருந்து ஏபி-13 பெருந்தெருவூடாக நாவலப்பிட்டியை அடையலாம். மாற்றாக இலங்கை தொடருந்து திணைக்களத்தின் மலையக பாதையின் மூலமாகவும் அடையலாம். நாவப்பிட்டியை திம்புளைக்கு பி-317, தொலொஸ்பாகைக்கு பி-318, கினிகத்தனைக்கு பி-319 மற்றும் அரங்கலைக்கு பி-506 என்ற பி தர பெருந்தெருக்கள் இணைக்கின்றன. மக்கள்நாவலப்பிட்டி ஒரு பல்கலாச்சார பல்சமய நகரமாகும். இது சிங்களவரை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
வரலாறுபிரித்தானியர் வருகையின் போது இந்நகர் ஒரு சிறிய கிராமமாகவே காணப்பட்டது. அவர்களின் ஆட்சியின் போது நகரைச் சூழவுள்ள பிரதேசத்தில் இரப்பர், கோப்பித் தோட்டங்கள் செய்யப்பட்டன. அவை ஒருவித நோயால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தேயிலை இப்பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக இந்தியாவின் அப்போதைய மெட்றாஸ் மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள் இப்பிரதேசத்தில் குடியேற்றப்பட்டனர். இன்றும் இவர்களது சந்ததியினர் குறிப்பிடத்தக்களவு பெரும்பான்மையுடன் நாவலப்பிட்டியில் வசிக்கின்றனர். 1874 ஆம் ஆண்டு தேயிலைத் தோட்டங்களிலிருந்து கொழும்புக்கு தேயிலையை கொண்டு செல்வதை இலகுவாக்கும் நோக்கில் நாவலப்பிட்டிக்கு தொடருந்து பாதையை அமைத்தார்கள். இந்நகரைச்சுற்றி வேறு இயற்கை வளங்கள் காணப்படாத நிலையில் நகரின் வளர்ச்சி இரயிலையும் அதனுடன் தொடர்புடைய சேவைகளையும் அண்டியே நடைபெற்றது. காலப்போக்கில் இரயிலின் முக்கியத்துவம் குன்றிப்போனாலும் நகரின் வளர்ச்சி பாரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அரசியல்நகரசபை 9 ஆசங்களையும் பிரதேச சபை 11 ஆசங்களையும் கொண்டதாகும். 2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: நாவலப்பிட்டி நகரசபை
மூலம்:[1] 2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: பஸ்பாகே கோரளை பிரதேசசபை
மூலம்:[2] பிரச்சினைகள்நகரில் அவ்வப்போது ஏற்பட்ட இனக்கலவரங்களும், அதிகளவு மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படும் இயற்கை அழிவுகளும் இந்நகரம் எதிநோக்கும் பிரச்சினைகளாகும். சுற்றுலாத் தளங்கள்/ பார்க்க வேண்டியவை
பிரபலமானவர்கள்
பிரபல பாடசாலைகள்
சமயத்தளங்கள்
குறிப்புகள்
உசாத்துணை
வெளியிணப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia