நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், தேவிகா, நம்பியார், நாகேஷ், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] ஸ்ரீதரின் தம்பி சி.வி. ராஜேந்திரன் இத்திரைப்படத்தின் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.[1] இத்திரைப்படம் மறுபிறப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.[2] இக்கதை செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.[1] நடிப்புஇசைஇத்திரைப்படத்தின் இசை, விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். ஜானகி, பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி பாடியுள்ளனர். இத்திரைப்படத்தில் வரும், ‘நெஞ்சம் மறப்பதில்லை’[3] மற்றும் ‘அழகுக்கும் மலருக்கும்,’ பாடல்கள் மிகவும் பிரபலம்.[1] இத்திரைப்படத்தின் பாடல் வரிகளை கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளனர். வரவேற்புநெஞ்சம் மறப்பதில்லை தமிழ்த் திரைப்படங்களில் உன்னதமானதாகக் கருதப்படுகிறது.[4][5][6] மறு ஆக்கம்2013-ம் ஆண்டு இத்திரைப்படத்தின் மறு ஆக்க உரிமையை இயக்குநர் செல்வராகவன் வாங்கியுள்ளார்.[5] குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia