நினைவெல்லாம் நித்யா
நினைவெல்லாம் நித்யா (Ninaivellam Nithya) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், முத்துராமன் மகனான கார்த்திக் உடன் ஜெமினி கணேசன் மகளான ஜீஜி இணைந்து நடித்திருந்தார். ஜீஜி நடித்த ஒரே படம் இதுவேயாகும். வர்த்தக ரீதியாக வெற்றியடையாத இப்படத்துடன் திரையுலகிலிருந்து விலகி விட்ட ஜீஜி, பின்னர் மருத்துவத் துறையில் ஈடுபட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான துறையில் மிகுந்த அளவு பணியாற்றியுள்ளார். நடிகர்கள்
இசைஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2] வர்த்தக ரீதியாக இப்படம் வெற்றி அடையாது போயினும், இளையராஜா வின் இசையிலும், வைரமுத்து வின் வரிகளிலும் இதன் பாடல்கள் மிகுந்த பிரபலம் ஆயின.[3] "பனி விழும் மலர்வனம்", "ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்" போன்ற பாடல்கள் இன்றளவும் மேடைகளிலும், தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளிலும் பாடப்பெறுகின்றன. ஹம்சநாதம் என்னும் கருநாடக இசை இராகத்தின் மீதாக அமைந்த "கன்னிப்பொண்ணு கைமேல" என்னும் பாடல் கிராமிய இசை முறைமையில் அமைந்துள்ளது அதன் தனிச் சிறப்பு. "பனி விழும் மலர்வனம்" பாடல் சலநாட என்னும் கருநாடக இசை இராகத்தில் அமைந்துள்ளது.[4]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia