நெல்லியடி மத்திய கல்லூரி
நெல்லியடி மத்திய கல்லூரி (Nelliady Central College) (முன்பு, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் (Nelliady Madhya Maha Vidyalayam)) யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல்லியடியில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். இது இலங்கையின் தேசியப் பாடசாலைகளுள் ஒன்றாகும். ஆரம்பம்நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் 1921ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. வரலாறு1946ஆம் ஆண்டில் இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கராவினால் 54 பாடசாலைகள் மத்திய மகா வித்தியாலயங்களாகத் தரமுயர்த்தப்பட்டன. அவற்றுள் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமும் ஒன்றாகும்.[1] பின்னர், முன்னை நாள் அதிபர் திரு. செல்லத்துரை சேதுராஜா காலத்தில் அக்டோபர் 6, 2011இலிருந்து இக்கல்லூரியானது தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.[2] ஈழப் போரின்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பெரும்பாலான பள்ளிகளைப் போலவே இந்தக் கல்லூரியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஈழப்போரின்போது இக்கல்லூரியில் இலங்கை இராணுவம் நிலை கொண்டு அதன் முகாமாக பயன்படுத்தியது. 1987 ஆம் ஆண்டு யூலை 5 ஆம் திகதி இலங்கை இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகளால் நெல்லியடி சமர் மேற்கொள்ளபட்டது. அப்போது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சிறிய ட்ரக் வண்டியை கப்டன் மில்லர் ஓட்டிச் சென்று, இலங்கையின் முதலாவது தற்கொலைத் தாக்குதல் இப்பாடசாலையில் நகழ்த்தப்பட்டது.[3][4] இங்கு படித்தவர்கள்
பாடசாலைப் பண்"வாழ்க வாழ்க வாழ்கவே..." இயற்றியவர பண்டிதர் க. வீரகத்தி பல்லவி இதையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia