பண்ருட்டி தொடருந்து நிலையம்
பண்ருட்டி தொடருந்து நிலையம் (Panruti railway station, நிலையக் குறியீடு:PRT) ஆனது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டி நகரத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த தொடருந்து நிலையம், தென்னக இரயில்வே மண்டலத்தின், திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும், நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கிறது. இடம் மற்றும் அமைப்புதஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் (NH 45C) பண்ருட்டி தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. இந்நிலையத்திற்கு அருகே உள்ள விமான நிலையம் 165 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி விமான நிலையம் ஆகும். இரயில் தடங்கள்இந்த இரயில் நிலையம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்குடி, திருவாரூர், இராமேஸ்வரம் போன்ற முக்கிய தொடருந்து நிலையங்களை சென்னையுடன் இணைக்கும் ஒரு மைய புள்ளியாக அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia