மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்
மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம் (Mayiladuthurai Junction railway station, நிலையக் குறியீடு:MV) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ளது ஒரு தொடருந்து நிலையம் ஆகும். தெற்கு இரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் கீழ் இந்த தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும், அதே போல் மற்ற மாநிலங்களை இணைக்கும் ஒரு நிலையமாக உள்ளது. இடம் மற்றும் அமைப்புமயிலாடுதுறை தொடருந்து நிலையம் நகரத்தின் தென்-மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் மிக அருகிலேயே பேருந்து நிலையம் உள்ளது. மயிலாடுதுறை தொடருந்து நிலையம், மயிலாடுதுறை நகரின் ஒரு மைய புள்ளியாகவும் சென்னை, நாகப்பட்டினம், இராமேசுவரம், கும்பகோணம், தஞ்சாவூர்,திருவாரூர்' மற்றும் பாபநாசம் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் நிலையமாக அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் மீது அமைந்துள்ளது. திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[2][3][4] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 20.46 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[5][6] குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia