பத்திந்தா மக்களவைத் தொகுதி
பத்திந்தா மக்களவைத் தொகுதி (Bathinda Lok Sabha constituency) வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 13 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 18வது மக்களவையில், அர்சிம்ரத் கவுர் பாதல் இத்தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 2009 முதல் மக்களவையில் பத்திந்தா மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். 2009 இந்தியப் பொதுத் தேர்தலில், அர்சிம்ரத் கவுர், யுவராஜ் ரனிந்தர் சிங்கை (அணித்தலைவர் அமரீந்தர் சிங்கின் மகன்) 1,20,948 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் இவர் மன்பிரீத் சிங் பாதலை 19,395 வாக்குகள் வித்தியாசத்திலும், 2019ஆம் ஆண்டில் அமரீந்தர் சிங் ராஜா வாரிங், அர்சிம்ர்த் கவுர் பாதலிடம் 21,722 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2024 இந்தியப் பொதுத் தேர்தலில், அர்சிம்ர்த் கவுர் பாதல் 49,656 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத் தொகுதிகள்பத்திந்தா மக்களவைத் தொகுதியின் கீழ் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] 2012 சட்டமன்றத் தேர்தலுக்காக, சில தொகுதிகள் மறுவடிவமைக்கப்பட்டன.[2] மவுர், புச்சோ மண்டி, பத்திந்தா ஊரகம் மற்றும் தல்வாண்டி சபோ ஆகியவை புதிய தொகுதிகளாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்Most Successful parties from Bathinda Lok Sabha சிகத (11 முறை) (57.894%) இதேகா(6 முறை) (31.578%) இபொக (1 முறை) (5.263%) சிஅத (அ) (1 முறை) (5.263%)
தேர்தல் முடிவுகள்2024
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia