பந்தர் மாசகர்
பான்டார்-இ மாக்சார் ( Bandar-e Mahshahr, Persian: بندرماهشهر, பிற பெயர்கள்: Bandar-e Māhshahr, Bandar-e Ma‘shūr, Bandar Mah-Shahr, Bandar Mah Sharh, Bandar-mashoor, Bandar-Mashour, Bandar Ma‘shūr, Bandar Mashur; ஒத்த பெயர்கள் : Bār Andāz, Māhshahr, Mah Shahr, and Mashur) என பலப்பெயர்களால் அழைக்கப்படும் இந்த நகரமானது, மாக்சார் மண்டலத்தின் தலைநகரம் ஆகும். பான்டார்-இ மாக்சார் நகரம் என்பது தென்மேற்கு ஈரானில் உள்ள கூசித்தான் மாகாணத்தில் உள்ள ஒரு பழங்கால நகரமாகவும், ஒரு துறைமுகமாகவும் திகழ்கிறது. முதலில் ரெய்ஷாஹர் என்றும் பின்னர் மச்சுலே என்றும் அழைக்கப்பட்ட இந்த நகரமானது, பான்டார்-இ மாக்சார் என பலராலும் அழைக்கப்படுகிறது. இதன் பெயர் மீண்டும் 1965 இல் மாற்றப்பட்டது, இந்த முறை பந்தர்-இ மஹ் ஷாஹர் என்று மாற்றப்பட்டது . "பந்தர்-இ" என்றால் "துறைமுகம்" என்பது பொருளாகும். மஹ்-ஷாஹர் என்ற சொல் பாரசீக மொழியாகும். இதன் பொருள் "நிலவு நகரம்" என்பதாகும். அபாடன் நகரின் எரிவாயு , எண்ணெய் பொருட்களை இந்த துறைமுகத்தை நடுவமாகக் கொண்டே ஏற்றுமதி செய்வதால், இத்துறைமுகம் ஈரான் நாட்டின் முக்கியமான ஒன்றாகும். பெட்ஸோன் ( மஹ்ஷரில் சிறப்பு பொருளாதார மண்டலம் மாக்சார் நகரில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன. மஹ்ஷர் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகம், அமீர்கபீர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும், அவை இரண்டும் மாக்சார் வளாகத்தில் அமைந்துள்ளன. இரு பல்கலைக்கழகங்களும் பொறியியல் பாடத்திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொறியியல் பாடத்திட்டங்களை சிறப்பாக நடத்தப் படுகின்றன. அதன் மக்களில் பெரும்பாலோர் பாரசீக மொழி பேசுபவர்கள். உள்ளூர் பெர்சியர்கள் பெரும்பாலும் பெபஹானி, கானாவதி மற்றும் பண்டாரி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு உள்ளூர் அரபு மொழி பேசும் சிறுபான்மையினரும் வாழ்கின்றனர். இந்த அரபு மொழியினர், ஈராக்கின் கபனுக்கு உரியவர்கள் எனத் தெரிய வருகிறது .[2] மக்கள் தொகை2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 61 வது இடத்தினைப் பெறுகிறது.[1] 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 162,797 நபர்களைக் கொண்டிருந்தது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட, அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதாவது 2011 ஆம் ஆண்டு, 153,778 நபர்கள், இந்நகரத்தில் வாழ்ந்திருந்தனர். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +5.86% அதிகரித்துள்ளது. காலநிலை2015 ஆம் ஆண்டு மாலை 4.30 மணிக்கு இந்த நகர வானூர்தி நிலையத்தில் அளவிடப்பட்ட காற்றின் வெப்பநிலை 46 °C (115 °F) இருந்தது. பனிப்புள்ளி 32 °C (90 °F) இருந்தது. ஈரப்பதம் 49% ஆகும். , 35 °C (95 °F) சற்று கீழேயுள்ள வெப்பநிலையைத் தான், அதிகபட்சமாக, மனிதர்கள் பொறுத்துக்கொள்ளக்கூடியதாகும். அதற்கு மேல் நீட்டிக்கப்பட்ட சூழ்நிலை வெளிப்பாடு மரணத்திற்கு வழிவகுக்கும்.[3] இந்நகரத்தில் 74 °C (165 °F) வெப்பக் குறியீடு இருந்தது. இது உலகில் எங்கும் பதிவு செய்யப்படாத இரண்டாவது மிக உயர்ந்த வெப்பக் குறியீடாகும். 2019 எரிபொருள் எதிர்ப்புக்கள்2019 ஈரானிய எரிபொருள் ஆர்ப்பாட்டங்களில், பண்டார்-இ மஹ்ஷாரில் பாதுகாப்புப் படையினர் 14 ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொன்றதாக, பன்னாட்டு பொது மன்னிப்பு அமைப்பு உறுதிப்படுத்தியது, இது தெஹ்ரான் அல்லது ஷிராஸ் போன்ற பெரிய நகரங்களை விட மரண தண்டனை அதிகம் [4] மேற் கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia