பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப், பரவலாக ஆங்கில எழுத்துச் சுருக்கமான பிடிஐ, (Pakistan Tehreek-e-Insaf, Urdu: پاکستان تحريک انصاف; பாக்கித்தான் நீதிக்கான இயக்கம்) முன்னாள் பாக்கிதானியதுடுப்பாட்டத்தலைவரும் நன்கொடையாளருமான இம்ரான் கானால் நிறுவப்பட்ட நடுமையான தேசியவாத, சமூகவாத அரசியல் கட்சி ஆகும். சமத்துவ, நவீன இசுலாமிய மக்களாட்சியிலமைந்த நலவாழ்வு அரசுக்காகப் போராடும் இக்கட்சி இருப்பு அமைப்பிற்கு எதிரான இயக்கமாகும். [1][2][4] பாக்கித்தானில் மிக விரைவாக வளர்ந்துவரும் கட்சியாக இது உள்ளது.[5] பாக்கித்தான் அரசியலில் குடும்ப வாரிசுகளால் இயக்கப்படாத ஒரே கட்சியாக இது விளங்குகிறது.[6] பாக்கித்தானிலும் உலகளவிலும் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் இக்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைப்படி பாக்கித்தானின் மிகப்பெரும் கட்சியாக கருதப்படுகிறது.[7][8][9] 2013இல் நடந்த தேர்தல் முடிவுகளின்படி பிடிஐ மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. மாநிலங்களில் பஞ்சாபிலும்கராச்சியிலும் இரண்டாவது பெரிய கட்சியாகவும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் முதன்மைக் கட்சியாகவும் விளங்குகிறது. தேர்தல் நாளன்று 7.5 மில்லியன் மக்கள் வாக்களித்திருந்தனர்.[10]வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் கூட்டணி அரசில் முதன்மை பெற்றுள்ளது.
↑ 2.02.1Marcus Michaelsen "Pakistan's dream catcher" "Iqbal's work has influenced Imran Khan in his deliberations on an "Islamic social state" 27 March 2012.