பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்![]() பிலிப்பியர் அல்லது பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் (Letter [Epistle] to the Philippians) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதினொன்றாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் ஆறாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Philippesious (Επιστολή Προς Φιλιππησίους) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Philippenses எனவும் உள்ளது [1]. தூய பவுல்தாம் [2] இம்மடலை எழுதியவர் என்பது விவிலிய அறிஞர்களின் ஒருமித்த கருத்து. இது கி.பி. சுமார் 55 அளவில் எழுதப்பட்டிருக்கலாம் [3]. பிலிப்பியர்: மகிழ்ச்சியை அறிவிக்கும் மடல்பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் ஒற்றுமை பற்றியும் மகிழ்ச்சி பற்றியும் அருமையான கருத்துக்களை எடுத்துக்கூறுகிறது; கிறிஸ்து இயேசுவின் வழியாய் அவற்றைப் பெற இயலும் என அழுத்தமாக எடுத்துரைக்கிறது. திருமுகத்தின் ஆசிரியர்தூய பவுல் இத்திருமுகத்தை எழுதினார் என அறிஞர் உறுதியாக நிலைநாட்டியுள்ளனர். இத்திருமுகம் பவுலது மிக உயர்ந்த சிந்தனைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. பவுல் எழுதியவற்றுள் மிகச் சிறந்த திருமுகமாக இதனைப் பலரும் கருதுகின்றனர். மடல் எழுந்த சூழலும் நோக்கமும்பவுல் தம் இரண்டாம் நற்செய்திப் பயணத்தின்போது பிலிப்பியில் பலரை மனம் மாற்றினார். சிறைப்பிடிக்கப்பட்டு, வியத்தகு முறையில் சிறையிலிருந்து தப்பினார். மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போதும் அங்கு வந்தார் (திப 20:1,6). பின்னாளில் பவுல் சிறைப்பட்ட போது பிலிப்பியர்கள் எப்பப்பிராதித்திடம் பணம் கொடுத்துப் பவுலுக்குப் பணிவிடை செய்யுமாறு அவரை அனுப்பினர் (4: 18). எப்பப்பிராதித்து கடுமையாக நோயுற்றார். குணம் பெற்ற பின் பவுல் பிலிப்பியர் திருமுகத்தை எழுதி அவரிடம் கொடுத்து அனுப்பியிருக்க வேண்டும் (2:25-30). தமக்கு உதவி செய்த பிலிப்பியருக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அவர்கள் மகிழ்வோடும் மன உறுதியோடும் கிறிஸ்தவ நம்பிக்கையோடு இலங்கவேண்டும் என்பதற்காகவும் பவுல் இம்மடலை எழுதுகிறார். பவுல் எங்குச் சிறைப்பட்டிருந்த போது இந்தத் திருமுகத்தை எழுதினார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. உரோமைச் சிறையிலிருந்து (கி.பி. 59-63) எழுதினார் என்பதே மரபுக் கருத்து. எனினும் அவரது மூன்றாம் நற்செய்திப் பயணத்தின் போது அவர் எபேசிலிருந்து கி.பி. சுமார் 55ஆம் ஆண்டளவில் இதனை எழுதியிருக்க வேண்டும் என்றே பல அறிஞர்கள் கருதுகின்றனர். திருமுகத்தின் உள்ளடக்கம்இத்திருமுகத்தில் பவுல் தன்னிலை விளக்கம் தருகிறார் (1:12-26; 4:10-19); தாம் சிறைப்பட்டதைப் பற்றி எடுத்துரைக்கிறார்; துன்பங்களில் பிலிப்பியர் மனவுறுதியோடு இருக்குமாறு கேட்டுக் கொள்கிறார் (1:27, 30; 4:4); பிலிப்பியர் தாழ்மையுடனும் ஒற்றுமையுடனும் இருக்குமாறு வேண்டுகின்றார்; தம்மை மிகவும் தாழ்த்திப் பின்னர் தந்தையால் உயர்த்தப்பட்ட இயேசுவை முன்மாதிரியாகக் காட்டுகிறார் (2:1-11; 4:2-3). திமொத்தேயுவைம் எப்பப்பிராதித்துவையும் பிலிப்பியத் திருச்சபை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பவுல் விரும்புகிறார் (2:19-30); யூதமயமாக்கலைக் குறித்துப் பிலிப்பியரை எச்சரிக்கிறார் (3: 1-21); தமக்கு உதவி செய்த பிலிப்பியருக்கு நன்றி செலுத்துகிறார் (4:10-20). பிலிப்பியர் திருமுகத்தில் பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் இல்லை. இக்கடிதம் மகிழ்வின் கடிதமாகும். மகிழ்வைக் குறிக்கும் 'காரா' எனும் கிரேக்கச் சொல் 16 முறை இத்திருமுகத்தில் வருகிறது. கிறிஸ்துவின் தாழ்மை உயர்வு பற்றிய கிறிஸ்தியல் பாடல் (2:5-11) மிகச் சிறப்பானது.
பிலிப்பியர் திருமுகத்திலிருந்து ஒரு பகுதிபிலிப்பியர் 2:3-11
பிலிப்பியர் நூலின் உட்பிரிவுகள்
|
Portal di Ensiklopedia Dunia