மஞ்சு மேக்வால்
மஞ்சு தேவி மேக்வால் (Manju Meghwal) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவரும் ஆவார். இவர் இராசத்தானின் நாகவுர் மாவட்டத்தின் ஜெயல் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[2][3][4] சாதனைகள்மஞ்சு மேக்வாலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள மகாத்மா ஜோதி ராவ் பூலே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. நாகவுர் மாவட்ட ஊராட்சி மக்கள் பிரதிநிதிகளின் பங்கு பற்றிய ஆய்வுக் கட்டுரையை இவர் தயாரித்தார்.[5] 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த சட்டமன்ற உறுப்பினர் விருது மஞ்சு தேவி மேக்வாலுக்கு வழங்கப்பட்டது. சட்டசபை சபாநாயகர் சிபி ஜோஷி மற்றும் முதல்வர் அசோக் கெலாட், எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா ஆகியோரால் வழங்கப்பட்ட பாராட்டுக் கடிதம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார். சபையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காகவும், அதிகபட்சப் பிரச்சினைகளை எழுப்பியதற்காகவும் இவருக்கு இந்த சிறந்த சட்டமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட்டது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia