மலாய் மக்கள்
மலாயர் (Malays, மலாய்: Orang Melayu, சாவி: أورڠ ملايو) அல்லது மலாய் மக்கள் எனப்படுவோர் கிழக்கு சுமத்திரா, மலாய் தீபகற்பம், கடலோர போர்னியோ, மேலும் இவற்றிற்கிடையே அமைந்துள்ள சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய இடங்களைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு ஆசுத்திரோனேசிய இனமதக் குழுவாகும். இந்த இடங்கள் இன்று மலேசியா, இந்தோனேசியா (கிழக்கு மற்றும் தெற்கு சுமத்திரா, பாங்கா பெலித்துங் தீவுகள், மேற்கு கலிமந்தான், ரியாவு தீவுகள்), தாய்லாந்தின் தெற்குப் பகுதி (பட்டாணி, சாத்துன், சோங்க்லா, யாலா, நாரதிவாட்), சிங்கப்பூர் மற்றும் புருணை தருசலாம் ஆகிய நாடுகளின் ஒரு பகுதியாகும். பல மலாய் துணைக்குழுக்களிடையே, முக்கியமாக கடல்சார் தென்கிழக்காசியாவில் உள்ள பல்வேறு பிராந்திய இனங்கள், பழங்குடியினரின் நூற்றுக்கணக்கான ஆண்டு குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு காரணமாக, கணிசமான மொழியியல், பண்பாடு, கலை, சமூக வேறுபாடுகள் உள்ளன. வரலாற்று ரீதியாக, மலாய் மக்கள் முதன்மையாக மலாயிக்கு மொழி பேசும் ஆசுத்திரோனேசியர்கள், மேலும் பல பண்டைய கடல் வணிக மாநிலங்களையும் இராச்சியங்களையும் நிறுவிய ஆசுத்திரேசியப் பழங்குடியினரிடமிருந்து முதன்மையாக வந்தவர்கள், குறிப்பாக புரூணை, கெடா, இலங்காசுக்கா, கங்கா நகரம், சி து, நக்கோன் சி தம்மரத்ம் பகாங், மெலாயு, சிறீவிஜயம் ஆகியவைகளைக் குறிப்பிடலாம்.[13][14] 15-ஆம் நூற்றாண்டில் மலாக்கா சுல்தானகத்தின் தோற்றம் மலாய் வரலாற்றில் ஒரு பெரிய புரட்சியைத் தூண்டியது, இதன் முக்கியத்துவம் அதன் தொலைநோக்கு அரசியல், பண்பாட்டுப் பாரம்பரியத்தில் தங்கியிருந்தது. மலாயிசத்தின் பொதுவான உறுதியான குறிப்பான்களான இசுலாத்தின் சமயம், மலாய் மொழி, மரபுகள் போன்றவை, இந்தக் காலத்திலேயே சகாப்தத்தில் பிரகடனப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது, இதன் விளைவாக மலாய் ஒரு பெரிய இனமதக் குழுவாக இப்பகுதியில் உருவெடுத்தது.[15] இலக்கியம், கட்டிடக்கலை, சமையல் மரபுகள், பாரம்பரிய உடை, கலை நிகழ்ச்சிகள், தற்காப்புக் கலைகள், அரச நீதிமன்ற மரபுகள் ஆகியவற்றில், மலாக்கா ஒரு தரநிலையை அமைத்தது, பின்னர் வந்த மலாய் சுல்தான்கள் இதனைப் பின்பற்றினர். மலாய் தீபகற்பம், சுமாத்திரா, போர்னியோவில் உள்ள மலாய் சுல்தான்களின் பொற்காலம் அவர்களின் குடிமக்களில் பலரைக் கண்டது, குறிப்பாக பத்தாக்கு, தயாக்கு, ஒராங் அசுலி, ஒராங் லாட் போன்ற பல்வேறு பழங்குடி சமூகங்கள் இசுலாமியமயமாக்கல், மலாய்மயமாக்கலுக்கு உட்பட்டன.[16] வரலாற்றின் போக்கில், "மலாய்" என்ற சொல் "மலாய் உலகில்" உள்ள பிற இனக்குழுக்களுக்கும் நீடிக்கப்பட்டது; இந்தப் பயன்பாடு தற்காலத்தில் மலேசியா, சிங்கப்பூர் போன்றவற்றில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது,[17] இந்த இனக்குழுவிலிருந்து குடியேறியவர்களின் வழித்தோன்றல்கள் 'அனக் தகாங்' ("வணிகர்கள்") என்று அழைக்கப்படுகின்றனர், அத்துடன் இவர்கள் பெரும்பாலும் இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களான அச்சே, பஞ்சாரியர், பூகிசு, மாண்டெய்லிங், மினாங்கபாவு, சாவகம் போன்றவற்றைச் சேர்ந்தவர்கள். மலாயர்களின் வரலாறு முழுவதும், இவர்கள் ஒரு கடலோர-வணிக சமூகமாக அறியப்பட்டுள்ளனர்.[18][19] இவர்கள் மினாங்கு, அச்சே போன்ற பிற உள்ளூர் இனக்குழுக்களின் பல பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, பகிர்ந்து கொண்டு அவற்றைப் பரப்பினர். குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia