மலையாமருங்கர் கோயில், பெருங்களூர்
மலையாமருங்கர் கோயில் என்பது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை வட்டத்தின் பெருங்களூரில் உள்ள ஓர் ஐயனார் கோயிலாகும். அமைவிடம்புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.[1] இறைவன், இறைவிஇக்கோயிலில் உள்ள இறைவன் மலையாமருங்கர் அய்யனார், இறைவி பூரணி புஷ்கலை.[1] சிறப்புபெருங்ளூரில் தன்னை வழிபடுகின்ற பக்தருக்கு கண் பார்வை வழங்கியதாகவும் அவர்களின் பரம்பரையினரே இக்கோயிலில் பணியாற்றி வருவதாகவும் கூறுகின்றனர். நாடி வருகின்ற பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மலையாமருங்கருக்கு, தம் விருப்பங்கள் நிறைவேற யானை வாங்கி வைப்பதாக பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.[1] திறந்திருக்கும் நேரம்ஒரு கால பூசை இங்கு நடத்தப்பெறுகிறது.இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 8.00 வரையிலும் திறந்திருக்கும். சித்திரை மாதத்தில் சித்திரைத்திருவிழா 10 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகிறது.[1] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia