மாலையிட்ட மங்கை
மாலையிட்ட மங்கை என்பது 1958 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கவிஞர் கண்ணதாசனின் நிறுவனமான, கண்ணதாசன் பிலிம்ஸ் தயாரித்த இத்திரைப்படத்தை ஜி. ஆர். நாதன் இயக்கியிருந்தார். டி. ஆர். மகாலிங்கம், பண்டரிபாய், மனோரமா, மைனாவதி, பத்மினி பிரியதரிசினி, காகா ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு விசுவநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[2] இந்தப் படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதியிருந்தார். நடிகர்கள்
படத்தின் சிறப்புகள்1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் உலக சாதனை படைத்த நடிகை மனோரமா இந்தத் திரைப்படத்தில் தான் அறிமுகமானார்.[3][4] இத்திரைப்படம் கவிஞர் கண்ணதாசன் தயாரித்த திரைப்படமாகும். இந்தப் படத்தில் இருந்துதான் கண்ணதாசன் ஒரு பாடல் ஆசிரியராக புகழ் பெற்றார். இந்தப் படத்தில் இடம் பெற்ற பதினைந்து பாடல்களும் மிகப் பிரபலமாகி பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. திரைப் படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த திரு டி.ஆர். மகாலிங்கம் அவர்கள் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் புகழ்பெற்றார். சரத்சந்திர சட்டோபாத்யாயா அவர்கள் எழுதிய 'சந்திரநாத்' என்னும் நாவலைத் தழுவி இப்படம் அமைந்திருந்தது.[1] பாடல்கள்விசுவநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் எழுதியவை. அனைத்து பாடல்களுமே முதலில் எழுதப்பட்டு பின்னர் மெட்டமைக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் பாடிய "செந்தமிழ் தேன்மொழியாள்" எனும் பாடல் மிகப்பெரும் வெற்றி பெற்ற சிறப்பான பாடலாகும்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia