மு. மு. இஸ்மாயில்
மு. மு. இஸ்மாயில் (பெப்ரவரி 8, 1921 – சனவரி 17, 2005) நீதியரசர்; தமிழறிஞர்; எழுத்தாளர்; சென்னை கம்பன் கழகத்தின் நிறுவுகைத் தலைவர்; கம்ப இராமாயண ஆய்வாளர். பிறப்புமு. மு. இஸ்மாயில் நாகபட்டணம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் 1921, பிப்ரவரி 8ஆம் நாள் பிறந்தார். ஒன்பது வயதில் தாயையும், பதிமூன்று வயதில் தந்தையையும் இழந்த அவரை உறவினர்கள் வளர்த்தார்கள். கல்விஇஸ்மாயில் நாகூரில் பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை (சிறப்பு) பட்டம் (Bachelor of Arts - Honours)பெற்றார். தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1945 ஆம் ஆண்டில் சட்ட இளவர் (Bachelor of Law) பட்டம் பெற்றார். கல்லூரியில் தன் பேராசிரியர் கே. சுவாமிநாதனுடன் ஏற்பட்ட உறவால், இஸ்மாயிலுக்கு காந்தியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. பணிதன்னுடைய ஆரம்ப காலத்தில் சென்னை விவேகானந்த கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[1][2] வழக்குரைஞர்இஸ்மாயில் சட்டக் கல்வியில் பட்டம் பெற்றதும் சென்னை வழக்குரைஞர் சங்கத்தில் பதிவு செய்துகொண்டார். 1946 ஆம் ஆண்டு முதல் 1959 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்தார். தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர்1959 ஆம் ஆண்டு முதல் 1967 சனவரி வரை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றினார். சட்ட விரிவுரையாளர்இஸ்மாயில் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக தொழில் புரிந்தபொழுதே பகுதி நேர சட்ட விரிவுரையாளராக 1946 ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை சென்னை விவேகானந்தர் கல்லூரியிலும் 1951ஆம் ஆண்டு முதல் 1959ஆம் ஆண்டு வரை சென்னை சட்டக் கல்லூரியிலும் பணியாற்றினார். கூடுதல் நீதிபதிஇஸ்மாயில் 1967 பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தில்லி உயர்நீதி மன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். நீதிபதி1967 நவம்பர் முதல் 1979 நவம்பர் 5 வரை சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். தலைமை நீதிபதிஇஸ்மாயில் 1979 நவம்பர் 6 ஆம் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1981 ஆம் ஆண்டும் சூலை மாதத்தில் மு. மு. இஸ்மாயிலைக் கலந்தாலோசிக்காமலேயே வேறு மாநிலத்திற்கு மாற்றினார். அதனைக் கண்டித்து 1981 சூலை 8 ஆம் நாள் தன் பதவியைத் துறந்தார். தற்காலிக ஆளுநர்1980 அக்டோபர் 27 ஆம் நாள் முதல் நவம்பர் 4 ஆம் நாள் வரை இஸ்மாயில் தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநராகப் பணியாற்றினார். சட்டக்கமிசன் தலைவர்2005 ஆம் ஆண்டில் சட்டக் கமிசன் தலைவராகப் பணியாற்றினார். சென்னை கம்பன் கழகம்மு. மு. இஸ்மாயிலுக்கு இளமையிலிருந்தே கம்பராமாயணத்தில் ஈடுபாடு இருந்தது. நாளடைவில் அவ்வீடுபாடு புலமையாக மலர்ந்தது. அதன் விளைவாக 1975 ஆம் ஆண்டில் "தினமணி" முன்னாள் ஆசிரியர் ஏ. என். சிவராமன், கம்பன் அடிப்பொடி சா. கணேசன், பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் சி. எம். அழகர்சாமி, பழ. பழனியப்பன் ஆகிய நண்பர்களின் துணையோடு சென்னையில் கம்பன் கழகத்தை உருவாக்கினார். தொடக்க நாள் முதல் தனது மரணம் வரை அவ்வமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். எழுத்துப்பணி
இலக்கிய ஈடுபாடுசென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பொது நிகழ்ச்சிகளில் பலமுறை ஸ்ரீராமகிஷ்ணர், சுவாமி விவேகானந்தர் பற்றி சொற்பொழிவு செய்திருக்கிறார்.அண்ணா சுப்ரமண்யம் மொழிபெயர்த்த உபநிஷத நூல்கள் இவருக்குப் பிடித்தவை. வேதாந்த கேசரி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கைகளின் ஆயுள் சந்தாதாரராக இருந்தவர்.[1] வெளிநாட்டுப் பயணம்இஸ்மாயில் ஹாங்காங் நாட்டின் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் அழைப்பின்பேரில் 1970 ஆம் ஆண்டு ஹாங்காங் சென்று வந்தார். விருதுகள்மு. மு. இஸ்மாயிலுக்கு அவரது தமிழ்த் தொண்டினை பாராட்டி பல்வேறு அமைப்புகள் பட்டங்களையும் விருதுகளையும் வழங்கினர். அவை வருமாறு:
மறைவுமு. மு. இஸ்மாயில் 2005 சனவரி 17ஆம் நாள் திங்கட் கிழமை சென்னையில் காலமானார். சான்றடைவு
|
Portal di Ensiklopedia Dunia