யூகோசுலாவிய தேசிய காற்பந்து அணி
யூகோஸ்லாவியா தேசிய காற்பந்து அணி (Yugoslavia national football team), யூகோஸ்லாவிய இராச்சியம் (Kingdom of Yugoslavia) (1918-1943) மற்றும் யூகோஸ்லாவிய சமதர்ம கூட்டாட்சிக் குடியரசு (Socialist Federal Republic of Yugoslavia) (1946-1991) ஆகிய அரசுகளின் சார்பில் பன்னாட்டுக் காற்பந்தாட்டங்களில் பங்கேற்ற காற்பந்து அணியாகும். இது, பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் பலமுறை வெற்றிகளைக் கண்ட அணியாகும். 1992-ஆம் ஆண்டில் நடைபெற்ற யூகோஸ்லாவியப் போரின்போது, ஐக்கிய நாடுகள் சபையின் உத்தரவின் பேரில் பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெற தடைவிதிக்கப்பட்டது. 1994-ஆம் ஆண்டில் தடை நீக்கப்பட்டபோது, யூகோஸ்லாவிய கூட்டாட்சிக் குடியரசு தேசிய காற்பந்து அணியாக உருவெடுத்தது. செர்பியா தேசிய காற்பந்து அணியானது, பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் ஆகியவற்றில் யூகோஸ்லாவியா அணியின் இடத்தைப் பெற்றது; அவ்விரு அமைப்புகளாலும், செர்பியாவே யூகோஸ்லாவிய அணிக்கடுத்த தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.[3][4][5] மேலும் பார்க்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia