1962 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1962 பிஃபா உலகக்கோப்பை (1962 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் ஏழாவது பதிப்பாகும். இப்போட்டிகள் 1962 மே 30 முதல் சூன் 17 வரை தென்னமெரிக்காவில் சிலியில் நடைபெற்றன.[1] இப்போட்டிகளுக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் 56 அணிகள் 1960 ஆகத்து முதல் 1961 திசம்பர் வரை ஆறு கூட்டமைப்புகளில் இருந்து போட்டியிட்டன. இவற்றில் 14 அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. புரவல நாடான சிலி, நடப்பு வாகையாளர் பிரேசில் ஆகியன போட்டியின்றி நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இறுதிப் போட்டியில் பிரேசில் அணி செக்கோசிலோவாக்கியாவுடன் மோதி 3–1 என்ற கணக்கில் உலகக்கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.
ஆடுகளத்தில் வீரர்களுக்கிடையேயான வன்முறை மற்றும் நச்சு சூழல் ஆகியவற்றால் சில போட்டிகளில் குழப்பநிலை தோன்றியது. இதில் சிலி, இத்தாலி அணிகளுக்கிடையேயான முதல்-சுற்று ஆட்டம் அடங்கும் (2-0), இது சாண்டியாகோ போர் என்று அறியப்பட்டது.[2][3] ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளைக் கொண்ட அணிகளைப் பிரிப்பதற்கான வழிமுறையாக கோல் சராசரியைப் பயன்படுத்திய முதல் உலகக் கோப்பை இதுவாகும்.[4] ஒரு போட்டிக்கு சராசரியாக மூன்று கோல்கள் (2.78) அடிக்கப்பட்ட முதல் உலகக் கோப்பையும் இதுவாகும்.[5]
↑"for the first time goal average was brought in as a means of separating teams with the same number of points""Compact book of the World Cup"(PDF). Archived from the original(PDF) on 30 December 2013.